நிலத்தில் போலி பத்திரம்? மோசடி பத்திரங்களை இனி ஐ.ஜி.யே ரத்து பண்ணலாம்! வருகிறது மத்திய அரசு சட்டம்
சென்னை: போலி ஆவணம், ஆள் மாறாட்டம் மூலம் பதிவு செய்யப்பட்ட மோசடி பத்திரங்களை ரத்து செய்ய முடியும். உரிமையாளருக்கு தெரியாமல் போலி ஆவணம் மூலம் சொத்துகளை அபகரிக்க மோசடியாக பத்திரப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், மோசடி பத்திரங்களை ஐஜி ரத்து செய்ய மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய பதிவு சட்டத்தில் வழிவகை செய்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கே பார்ப்போம்..
எந்தவொரு நிலத்தை வாங்குவதற்கும், விற்பதற்கும், பத்திரங்கள் கட்டாயமாகிறது.. எனவேதான், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரங்களை போலவே உருவாக்கி மோசடிகள் அதிகரித்து வருகிறது.

போலியான ஆவணங்கள்
ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள், ஏதாவது கண்டறியப்பட்டால், சார் பதிவாளரோ, பத்திரப்பதிவு ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி, கோர்ட்டின் உதவியை சம்பந்தப்பட்டவர்கள் நாடலாம்.. அந்தவகையில், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் ஹைகோர்ட்டுக்கு மட்டுமே இருந்துவந்த நிலையில், இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
இதற்கு காரணம், மோசடி பத்திரங்களை ரத்து செய்வதில் அபரிமிதமான தாமதம் ஏற்படுவதாக கருதப்பட்டது. எனவே, எங்காவது பத்திர மோசடி தென்பட்டால், பத்திரப்பதிவுத் தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச்சட்ட மசோதா, கடந்த 2022 ஆகஸ்ட் 16 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது..
1100 பத்திரங்கள்
இதற்கு பிறகு, பதிவாளர்கள் விசாரணை அடிப்படையில், 1,100 பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டன. எனினும், இந்த புதிய சட்டத்திருத்தம் வருவதற்கு முந்தைய காலத்தில் நடந்த மோசடிகளையும் விசாரிக்க முடியுமா? என்ற குழப்பம் எழுந்தது.. இந்த விவகாரம் நீதிமன்றம் வரையும் சென்றது..
இதனை விசாரித்த சென்னை ஹைகோர்ட், சட்டத்திருத்தம் அமலாகும் தேதி குறித்த தெளிவு இல்லாததால், அதற்கு தடை விதித்தது. இதனால், மோசடி பத்திரங்கள் குறித்த புகார்கள் பெறுவதும், விசாரணை நடத்துவதும் நிறுத்தப்பட்டது..எனவே, இந்த விவகாரத்தில், ஏற்கனவே மாவட்ட பதிவாளர்கள் பிறப்பித்த உத்தரவுகள் தொடர்பான மேல் முறையீட்டை, பதிவுத்துறை ஐ.ஜி., விசாரிப்பதும் நிறுத்தப்பட்டது.
மீண்டும் கிளம்பிய சந்தேகம்
இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த ஹைகோர்ட், மோசடி புகார் அடிப்படையில், மாவட்ட பதிவாளர்கள் பிறப்பித்த ரத்து ஆணையை நீக்கி உத்தரவிடவும், 1,100 பத்திரங்களுக்கான ரத்து ஆணையும் நீக்கப்படுமா? என்ற சந்தேகம் கிளம்பியது.
இந்நிலையில், 1908ம் ஆண்டு பதிவு சட்டத்துக்கு மாற்றாக, 2025ம் ஆண்டு பதிவு சட்டம் என்ற புதிய சட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது.. இது தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இதன் வரைவு ஆவணத்தை, மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.. இதற்கு பொது மக்களுக்கு 30 நாட்கள் அவகாசம் தரப்பட்டும், கருத்து தெரிவிக்க அழைப்பும் விடப்பட்டுள்ளது.
புதிய சட்ட வரைவு ஆவணம்
பத்திரப்பதிவில் நிலவும் குழப்பங்களுக்கு விரைந்து தீர்வு கிடைக்க, புதிய பிரிவுகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன.முக்கியமாக, புதிய சட்டத்தின் வரைவு ஆவணத்தில், 64வது பிரிவில் பத்திரங்களை ரத்து செய்வதற்கான நடைமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.
இதில் தவறான தகவல்கள் அடிப்படையில் பதிவான பத்திரங்களை ரத்து செய்யலாம் என்றும், பதிவுத் துறை ஐஜி இதற்கான அதிகாரம் பெற்றவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
தவறான தகவல்கள் அடிப்படையில் தாக்கலாகும் பத்திரங்களை ரத்து செய்ய, சார் - பதிவாளர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமலாகும்பட்சத்தில், மோசடி பத்திரங்களை ரத்து செய்ய, கோர்ட்டுக்கு போக வேண்டிய அவசியம் இருக்காது என்கிறார்கள் பதிவுத்துறை அதிகாரிகள் தரப்பில்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications