Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“1,60,000 ரூபாய் செலவு இனி, 80 ஆயிரமாகக் குறையும்” - பத்திரப் பதிவர்கள் சொல்லும் ‘குட் நியூஸ்’

தமிழ்நாட்டில் பத்திர பதிவு கட்டணத்தை 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் ஆகக் குறைக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்றைய பட்ஜெட் உரையில் கூறினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்கும் விதமாக, பத்திரப் பதிவுக் கட்டணத்தை 4% இல் இருந்து 2% ஆகக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நேற்று தனது 2023-24 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை உரையின்போது அறிவித்தார்.

இது தொடர்பாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில், " 01.04.2012 அன்று உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, 09.06.2017 அன்று முதல் ஒரே சீராக 33 சதவீதம் குறைக்கப்பட்டது.

Registration fee to be reduced from 4 percent to 2 percent

மேலும், விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவுக் கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டது.

சந்தை மதிப்பிற்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக் கட்டணத்தைக் குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கோரிக்கைகளை ஏற்று, வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.

Registration fee to be reduced from 4 percent to 2 percent

இக்குழு நில அளவை எண் வாரியாக திருத்தம் மேற்கொள்ளக் கால அவகாசம் தேவைப்படும். ஆகவே, வெளிச்சந்தையில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், இக்குழுவின் அறிக்கை பெறும்வரை, வழிகாட்டி மதிப்பை 08.06.2017 வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க, பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு, 8-6-2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்' என விளக்கம் அளித்திருந்தார்.

Registration fee to be reduced from 4 percent to 2 percent

இந்த அறிவிப்பைப் பலரும் வரவேற்றுள்ளனர். இந்தத் துறையில் பல ஆண்டுகளாக உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள்? சிலரைக் கேட்டோம்.

பத்திரப் பதிவு செயலாளர் பழனியப்பன், "ஒருவர் 40 லட்சம் போட்டு சொத்தை வாங்கினால், முன்பு 1லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பத்திரப் பதிவுக்கே செலவாகும். இப்போது 4% இல் இருந்து 2% ஆக பத்திரப் பதிவு கட்டணத்தை அரசு குறைத்துள்ளது.

Registration fee to be reduced from 4 percent to 2 percent

இதனால், அதே 40 லட்ச ரூபாய் சொத்துக்கு இப்போது 80 ஆயிரம் ரூபாய் கட்டினால் போதும். இந்தளவுக்குக் கட்டணத்தைக் குறைத்துள்ளதால் மக்கள் அதிகமாகச் சொத்துகளை வாங்க முன்வருவர். அத்துடன் ரியல் எஸ்டேட் தொழில் கூடுதலாக வளர்ச்சி அடையும்" என்கிறார்

சேலத்தைச் சேர்த்தவர் "இன்றைக்கு ஏழை மக்கள் வீடு, மனை வாங்க வேண்டும் என்றால் முன்பு பத்திரப் பதிவுக்கே அதிக தொகை செலவு செய்ய வேண்டி இருந்தது. இந்தத் தொகை 2% ஆகக் குறைக்கப்பட்டது பெரிய விஷயம். இதனால் ஏழை மக்கள் அதிகம் பயன்பெறுவர்" என்கிறார்.

ஆவண எழுத்தாளர், கார்த்திகேயன், "முன்பு ஒரு லட்ச ரூபாய் சொத்துக்கு 40 ஆயிரம் ரூபாய் பதிவுக் கட்டணம் இருந்தது. இப்போது அதே தொகையான சொத்துக்கு 20 ஆயிரம் இருந்தாலே பதிவு செய்யலாம். இது மக்களுக்கு எவ்வளவு பெரிய லாபம் தெரியுமா?

இதனால் ரியல் எஸ்டேட் தொழில் செழிக்கும். அரசுக்கும் லாபம் வரும். பத்திரப் பதிவின் எண்ணிக்கை ஒரு சதவீதம் கூடும். அல்லது 100 சதவீதமாகக் கூட அதிகரிக்கலாம். இந்த அரசு திறம்படச் செயல்படுகிறது அதற்கு இதுவே உதாரணம். இந்த அரசிற்கு இது மேலும் ஒரு மைல்கல்" என்கிறார்

Registration fee to be reduced from 4 percent to 2 percent

ராஜேந்திரன் சென்னை, "இந்தக் கட்டணக் குறைப்பு சிறிய அளவில் நிலத்தைப் பதிவு செய்பவர்களுக்கு நன்மையாக அமையும். 1200 சதுர அடி அல்லது 600 சதுர அடி எனப் பதிவு செய்பவர்கள் அதிகம். அவர்களால் முன்பு இருந்த கட்டணத்தைத் திரட்டுவது கடினம். இப்போது அந்தப் பதிவு தொகை அப்படியே இரண்டு மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. இதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்" என்கிறார்

Registration fee to be reduced from 4 percent to 2 percent

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜெயராமன், சென்னையைப் பொறுத்தவரைப் பல பகுதிகளில் நிலம் வாங்குவது பெரிய கனவாக உள்ளது. ஏனெனில் நில வழிகாட்டி மதிப்பீடு என்பது பெரிய விலையில் உள்ளது. அதை வாங்கி பதிவு செய்வது என்பது கஷ்டமாக உள்ளது.

Registration fee to be reduced from 4 percent to 2 percent

ஆகவே பத்திரப்பதிவு கட்டணத் தொகை குறைத்துள்ளது நல்ல முடிவு. இதனால் நிலப் பதிவு செய்யாமல் தேங்கிக் கிடக்கும் நிலங்களைப் பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் முன்வருவார்கள்" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+