ஓபிஎஸ்ஸிடம் தமிழ் எழுத பணியாற்றியிருக்கிறேன்.. மிகவும் அமைதியான நபர்.. ரேகா நாயர் பேட்டி
சென்னை: நான் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுடன் நிறைய நாள் இருந்திருக்கிறேன். அவர் மிகவும் அமைதியானவர் என நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார். இவரது பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தவர் ரேகா நாயர். இவர் சீரியலில் நடித்ததை விட நடிகை சித்ரா உயிரிழந்த போது அவரது மரணம் குறித்தும் அவருடைய கணவர் ஹேமந்த் குறித்தும் பல்வேறு பகீர் தகவல்களை தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அவர் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். இவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்த போதிலும் சரியான வாய்ப்பு வராமல் சைடு கேரக்டர்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு இரவின் நிழல் என்ற படம் புகழை தந்தது.
பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்த படத்தில் இவர் அரை நிர்வாணமாக நடித்திருந்தார். இது பெரும் பேசும் பொருளானது. ரேகா நாயர் நடித்திருந்த காட்சிகளை பயில்வான் ரங்கநாதன் தரக்குறைவாக விமர்சித்திருந்தார். இதனால் கடும் கோபத்தில் இருந்த ரேகா நாயர் அவரை எங்கு பார்த்தாலும் அடிப்பேன் என பேட்டி அளித்திருந்தார்.
அந்த வகையில் பயில்வானை திருவான்மியூர் கடற்கரையில் வைத்து கடுமையாக சண்டையிட்டார் ரேகா நாயர். மேலும் அவரை அடிக்கவும் பாய்ந்தார். அங்கு நடைபயிற்சிக்கு வந்தவர்கள் ரேகாவை தடுத்து நிறுத்தினர். மேலும் ஒரு விழாவில்கூட ரேகா நாயர் பேசுகையில் பயில்வான் ரங்கநாதன் செத்தால் அன்று நான் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அண்மையில் கூட எனக்கு திருமணம் ஆகவில்லை எனறால் நிச்சயம் நடிகர் தனுஷை திருமணம் செய்திருப்பேன் என பேசியிருந்தார். மேலும் தனுஷ் மீதான காதலையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறு பரபரப்பான பேட்டிகளை அளித்து வரும் ரேகா நாயர் அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்தும் பேசியுள்ளார்.
அந்த வகையில் அவர் ஓபிஎஸ் குறித்து பேசியிருந்தது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் ரேகா நாயர் கூறுகையில் ஓபிஎஸ் கூட நிறைய நாள் இருந்திருக்கேன். ஓபிஎஸ் கட்சியிலிருந்து விலகிய போது அவருக்கு தமிழ் எழுதுவதற்கு ஒருவர் மூலம் எனக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து அவரிடம் பணியில் சேர்ந்தேன். பல நாட்கள் காலை சென்றுவிட்டு மாலை வரை அவரது வீட்டில் பணியாற்றிவிட்டு வருவேன். அவர் மிகவும் அமைதியான மனிதர். இவ்வாறு ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications