“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி!
சென்னை: "வெளிப்படைத்தன்மை பற்றி முழங்கும் முதல்வர் விஜய், மூடப்பட்ட மதுக்கடைகளின் முகவரியுடன் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட இவ்வளவு தயங்குவது ஏன்? காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா முதலமைச்சர் விஜய்?" என பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,765 சில்லறை கடைகள் வாயிலாக, மது பானங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி, கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை இரு வாரங்களுக்குள் மூட, கடந்த மாதம் 12 ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டார். அதற்கு ஏற்ப, அந்த கடைகளும் சமீபத்தில் மூடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எத்தனை? அவற்றில் பள்ளி, கல்லூரிகளின் அருகிருந்த கடைகள் எத்தனை? அவற்றுள் எத்தனை கடைகள் மூடப்பட்டிருக்கின்றன? போன்ற தகவல்களை சமூக ஆர்வலர் ஒருவர் ஆர்.டி.ஐ மூலம் டாஸ்மாக் நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு டாஸ்மாக் நிறுவனம் அளித்த பதில் ஷாக் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் எத்தனை டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன? என்ற கேள்விக்கு கோப்பு நிலுவையில் உள்ளது தகவல் வழங்க இயலாது" என டாஸ்மாக் நிறுவனம் பதில் கூறியிருக்கிறது.
பள்ளி, கல்லூரி, கோவில்களின் அருகே எத்தனை கடைகள் கண்டறியப்பட்டன? அவற்றுள் எத்தனை கடைகள் மூடப்பட்டன அந்த கடைகளுடைய நம்பர் என்ன? அந்தக் கடைகளில் எத்தனை பணியாளர்கள் பணியில் இருந்தனர்? அவர்களுக்கு எங்கே மாற்றுப்பணி வழங்கப்பட்டிருக்கிறது? என்ற தகவல்களையும் அவர் கேட்டிருந்தார்.
டாஸ்மாக் நிறுவனம், 'கேள்வி 1 க்கு கூறிய பதிலே இதற்கும் பொருந்தும்' என்கிற பதிலையே அத்தனை கேள்விகளுக்கும் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை பற்றிய விவரங்களை தராமல் இதுபோன்ற வினோத பதிலை தந்தது ஏன் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா முதலமைச்சர் விஜய்?
தகவல் அறியும் உரிமையிலும் பட்டியலைத் தராமல் கோப்பு நிலுவையில் உள்ளது என ஒளிந்துகொள்கிறது த.வெ.க அரசு. வெளிப்படைத்தன்மை பற்றி முழங்கும் முதல்வர் விஜய், மூடப்பட்ட மதுக்கடைகளின் முழு முகவரியுடன் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட இவ்வளவு தயங்குவது ஏன்?
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல், உடனடியாகப் பட்டியலை வெளியிடுக!" எனத் தெரிவித்துள்ளார் எஸ்.ஜி.சூர்யா.
-
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
3 மாதங்களில் கோவில் பிரசாதத்தை அரசே தயாரித்து விற்கும்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி!













Click it and Unblock the Notifications