ரெம்டெசிவிர் விற்பனை மையங்களை அதிகப்படுத்துங்கள் - தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை
ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். விற்பனை மையங்களின் எண்ணிக்கையையும் உடனடியாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கொரோனா தொற்றின் லேசான பாதிப்புக்குள்ளானவர்களுககு ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளை உயிர்காக்கும் மருந்தாக மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். இதனால், தனியார் மருத்துவமனைகளின் மருந்தகங்களில் ரெம்டெசிவிர் மருந்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்து விற்பனையகங்கள், அதன் விலையை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து ரெம்டெசிவிர் மருத்து வாங்கவேண்டியிருப்பதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள, உயிர் காக்கும் மருந்தகத்தில், ரெம்டெசிவிர் மருந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மருந்து வாங்குவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். டோக்டன் மூலமும் மேலும், ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்து வரும் அரசின் உயிர் காக்கும் மருந்தகங்களை பிற மாவட்டங்களிலும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்த நிலையில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும். விற்பனை மையங்களின் எண்ணிக்கையையும் உடனடியாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications