ரெம்டெசிவிர் விற்பனை மையங்களை அதிகப்படுத்துங்கள் - தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை
ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். விற்பனை மையங்களின் எண்ணிக்கையையும் உடனடியாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கொரோனா தொற்றின் லேசான பாதிப்புக்குள்ளானவர்களுககு ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளை உயிர்காக்கும் மருந்தாக மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். இதனால், தனியார் மருத்துவமனைகளின் மருந்தகங்களில் ரெம்டெசிவிர் மருந்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்து விற்பனையகங்கள், அதன் விலையை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து ரெம்டெசிவிர் மருத்து வாங்கவேண்டியிருப்பதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள, உயிர் காக்கும் மருந்தகத்தில், ரெம்டெசிவிர் மருந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மருந்து வாங்குவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். டோக்டன் மூலமும் மேலும், ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்து வரும் அரசின் உயிர் காக்கும் மருந்தகங்களை பிற மாவட்டங்களிலும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்து... இந்தியாவுக்கு நன்கொடையாக வழங்கும் அமெரிக்க நிறுவனம்
இந்த நிலையில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும். விற்பனை மையங்களின் எண்ணிக்கையையும் உடனடியாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.