தமிழகம் முழுக்க 43,051 வினியோக மையங்கள்.. நாளை போலியோ சொட்டு மருந்து வழங்க மறவாதீர்
சென்னை: தமிழகத்தில் மார்ச் 10 ம் தேதி (நாளை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு 11, 12ம் தேதிகளில் வீடுவீடாக சென்று சொட்டு மருந்து வழங்க திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள் , ரயில் நிலையங்கள் , பேருந்து நிலையங்கள், நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் என காலை 7 மணியிலிருந்து இடைவெளியின்றி மாலை 5 மணி வரை தொடர்ந்து முகாம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு, விடுபட்ட குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு 67 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 43,051 சொட்டு மருந்து வினியோக மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் 2004 ம் ஆண்டுக்கு பின் போலியோ பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதுமுதல் தமிழகம் போலியோ இல்லாத மாநிலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications