ஆதித்யா எல்1 “ஆட்டம் ஸ்டார்ட்”.. பூமியிலிருந்து 50,000 கிமீ தூரத்தில் வெப்பம் எப்படி? ஆய்வு ஆரம்பம்
சென்னை: கடந்த சில வாரங்களுக்கு முன் இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்1 விண்கலம், எல்1 புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ள நிலையில், ஆய்வுப் பணிகளையும் தொடங்கி இருக்கிறது.
சந்திரயான் 3 இன் வெற்றியை தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த முயற்சியாக கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 11.50 மணியளவில் ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்தை PSLV C57 ராக்கெட் விண்ணில் சுமந்து சென்றது. இதனை ஏவுவதற்கான கவுன்டவுன் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு தொடங்கியது .

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சமமான ஈர்ப்பு விசையை கொண்டு உள்ள எல்1 என்ற புள்ளியை 100 முதல் 120 நாட்கள் பயணித்து இந்த விண்கலம் அடைய உள்ளது. ஆதித்யா எல் 1 புள்ளியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த பிறகு ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய புயல், கொரோனா, பிளாஸ்மா குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது.
இந்தியாவால் சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட முதல் விண்கலம் இந்த ஆதித்யா எல் 1 க்கும் உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நிகர் சாஜி தலைமையிலான குழு கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை வடிவமைத்தது. இதன் சோதனைகளை வெற்றிகரமாக முடிந்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விண்ணில் ஏவப்பட்டது.
இந்த விண்கலம் சூரியனில் இருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவு வரை இது பயணித்து எல் 1 என்ற புள்ளியை அடையும். அதன் வெப்பத்தை தாங்கும் அளவுக்கு இது திடமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஆதித்யா எல்1 விண்ணில் செலுத்தப்பட்டதில் இருந்து புவியின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வந்தது. கடந்த 16 நாட்களாக புவியை சுற்றி வந்த ஆதித்யா எல்1 விண்கலம், நேற்று அதில் இருந்து விலகியது. இதனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்கான சமமான ஈர்ப்பு விசையை கொண்ட லக்ரான்சியன் புள்ளியை நோக்கி ஆதித்யா எல்1 பயணத்தை தொடங்கி இருப்பதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.
புவியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த எல் 1 புள்ளியை 110 நாட்கள் பயணம் செய்து ஆதித்யா எல்1 அடைய இருக்கிறது என இஸ்ரோ ட்விட்டரில் தெரிவித்து உள்ளது. மற்றொரு பதிவில், ஆதித்யா எல்1 விண்கலம் அறிவியல் தகவல்களை சேகரிக்க தொடங்கி இருப்பதாக இஸ்ரோ தெரிவித்து இருக்கிறது.
அதில் இருக்கும் ஸ்டெப்ஸ் எனப்படும் கருவி, அளவீடுகளை தொடங்கி உள்ளது. பூமியில் இருந்து 50 ஆயிரம் கிலோ தொலைவில் உள்ள அதிக வெப்பம், ஆற்றம், அயான்கள், எலக்டிரான்களை அது அளவிட தொடங்கி உள்ளது. அது அனுப்பும் தகவல்கள் பூமியை சூழ்ந்து இருக்கும் துகள்களை பகுப்பாய்வு செய்ய உதவும் என இஸ்ரோ கூறியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications