ஆதித்யா எல்1 “ஆட்டம் ஸ்டார்ட்”.. பூமியிலிருந்து 50,000 கிமீ தூரத்தில் வெப்பம் எப்படி? ஆய்வு ஆரம்பம்
சென்னை: கடந்த சில வாரங்களுக்கு முன் இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்1 விண்கலம், எல்1 புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ள நிலையில், ஆய்வுப் பணிகளையும் தொடங்கி இருக்கிறது.
சந்திரயான் 3 இன் வெற்றியை தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த முயற்சியாக கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 11.50 மணியளவில் ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்தை PSLV C57 ராக்கெட் விண்ணில் சுமந்து சென்றது. இதனை ஏவுவதற்கான கவுன்டவுன் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு தொடங்கியது .

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சமமான ஈர்ப்பு விசையை கொண்டு உள்ள எல்1 என்ற புள்ளியை 100 முதல் 120 நாட்கள் பயணித்து இந்த விண்கலம் அடைய உள்ளது. ஆதித்யா எல் 1 புள்ளியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த பிறகு ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய புயல், கொரோனா, பிளாஸ்மா குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது.
இந்தியாவால் சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட முதல் விண்கலம் இந்த ஆதித்யா எல் 1 க்கும் உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நிகர் சாஜி தலைமையிலான குழு கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை வடிவமைத்தது. இதன் சோதனைகளை வெற்றிகரமாக முடிந்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விண்ணில் ஏவப்பட்டது.
இந்த விண்கலம் சூரியனில் இருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவு வரை இது பயணித்து எல் 1 என்ற புள்ளியை அடையும். அதன் வெப்பத்தை தாங்கும் அளவுக்கு இது திடமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஆதித்யா எல்1 விண்ணில் செலுத்தப்பட்டதில் இருந்து புவியின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வந்தது. கடந்த 16 நாட்களாக புவியை சுற்றி வந்த ஆதித்யா எல்1 விண்கலம், நேற்று அதில் இருந்து விலகியது. இதனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்கான சமமான ஈர்ப்பு விசையை கொண்ட லக்ரான்சியன் புள்ளியை நோக்கி ஆதித்யா எல்1 பயணத்தை தொடங்கி இருப்பதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.
புவியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த எல் 1 புள்ளியை 110 நாட்கள் பயணம் செய்து ஆதித்யா எல்1 அடைய இருக்கிறது என இஸ்ரோ ட்விட்டரில் தெரிவித்து உள்ளது. மற்றொரு பதிவில், ஆதித்யா எல்1 விண்கலம் அறிவியல் தகவல்களை சேகரிக்க தொடங்கி இருப்பதாக இஸ்ரோ தெரிவித்து இருக்கிறது.
அதில் இருக்கும் ஸ்டெப்ஸ் எனப்படும் கருவி, அளவீடுகளை தொடங்கி உள்ளது. பூமியில் இருந்து 50 ஆயிரம் கிலோ தொலைவில் உள்ள அதிக வெப்பம், ஆற்றம், அயான்கள், எலக்டிரான்களை அது அளவிட தொடங்கி உள்ளது. அது அனுப்பும் தகவல்கள் பூமியை சூழ்ந்து இருக்கும் துகள்களை பகுப்பாய்வு செய்ய உதவும் என இஸ்ரோ கூறியுள்ளது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications