சென்னையில் நாளை இரவு 10 மணிக்கு பார்கள், கடற்கரை மூடல்.. புத்தாண்டை கொண்டாட தடை.. கமிஷனர் வார்னிங்
சென்னையில் புத்தாண்டு கொண்டாட விதிமுறைகள் வரையறைக்கப்பட்டுள்ளன
சென்னை: நாளை இரவு 10 மணிக்கு சென்னையில் ஹோட்டல்கள்,கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுபான பார்களை திறக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை இரவு முதலே புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகி விடும்.. வழக்கமாக சென்னையை பொறுத்தவரை புத்தாண்டை மிக சிறப்பாக கொண்டாடுவர்.. குறிப்பாக லட்சக்கணக்கானோர் மெரினா கடற்கரையில் ஒன்று கூடுவார்கள். அதேபோல, ஸ்டார் ஹோட்டல்களிலும், ரிசார்ட்களிலும் ஒன்றுகூடி புத்தாண்டை வரவேற்பார்கள்.

ஆனால், இந்த வருடம் எல்லாமே தலைகீழாகிவிட்டது.. கொரோனா தொற்று இந்தியாவுக்குள் ஊடுருவி மொத்த பேரையும் உலுக்கி எடுத்து வருகிறது.. தற்போதும் இதன் தாக்கம் குறையாததாலும், கொரோனா அச்சம் காரணமாகவும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.
அதன்காரணமாக, ஸ்டார் ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை, நாளை இரவு 10 மணிக்கு மேல் திறக்கக்கூடாது என சென்னை மாநகர காவல் கமிஷனர் மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.. அதேபோல, உணவகங்களும் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்..
பீச் ரோட்டில் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது... அதேபோல, சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் நள்ளிரவில் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு இரவு வழக்கம்போல போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர் என்றாலும் இந்த முறை 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், 300 இடங்களில் வாகன சோதனை நடைபெற உள்ளதாகவும் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
தடையை மீறி யாராவது ஸ்டார் ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல, வாகனங்களில் ரேஸ் நடத்தினால், அவர்கள் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டும் என்று கமிஷனர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications