நான் ஊதியம் பெற மாட்டேன்.. நிபந்தனையை கேட்டு திகைத்து போன முதல்வர்.. நிஜ ஜெயபீம் சந்துரு
சென்னை: எனக்கு ஊதியம் தேவையில்லை என முதல்வர் ஸ்டாலினிடம் கூறிய போது அவர் திகைத்து போனார் என நீதியரசர் சந்துரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் நீதிபதி கே சந்துரு. இவர் நீதிபதியாக இருந்த காலத்தில் 96 ஆயிரம் வழக்கபகளை தீர்த்து வைத்துள்ளார். 1993 ஆம் ஆண்டு சாதி பாகுபாடுகளுக்கு எதிராகவும், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகவும் போராடியதற்காக நீதிபதி சந்துரு கொண்டாடப்படுகிறார்.

அந்த சம்பவத்தை மையமாக கொண்டு ஜெய்பீம் படம் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதில் நீதிபதி சந்துருவின் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். இவர் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுக்களைத் தடை செய்வது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இது தொடர்பான அறிக்கையை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்திருந்தார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலின பள்ளி மாணவர் சின்னத்துரையும் அவருடைய சகோதரியும் சக மாணவர்களால் தாக்கப்பட்டார். பள்ளி படிக்கும் போதோ ஜாதி எனும் விஷச்செடி மாணவர்கள் மத்தியில் வேரூன்றி இருப்பதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டிருந்தார். சம்பந்தப்பட்ட பள்ளியில் சந்துரு ஆய்வு நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடை, பள்ளி கல்லூரிகளிடையே ஜாதி வன்முறைகள் தடுப்பு தொடர்பான ஆணையங்களை தலைமை வகிப்பது குறித்து சந்துரு கூறியிருப்பதாவது: மாநில அரசால் அமைக்கப்படும் ஆணையங்களை தலைமை வகிக்க எந்த ஊதியமும் பெறுவதில்லை. எனக்கு ஓய்வூதியம் வருகிறது, அது போதும்.
ஆணையத்தின் தலைவராக நியமிக்கும் போதே எந்த ஊதியத்தையும் கவுரவத்தையும் பெற மாட்டேன் என நிபந்தனையுடன்தான் இந்த பொறுப்புகளை ஏற்றுக் கொண்டேன். நான் சொன்னதை கேட்டு முதல்வர் ஸ்டாலின் திகைத்து போனார். நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு ஊதிய பணிகளை பெற அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த எண்ணத்தை அகற்ற வேண்டும் என சந்துரு தெரிவித்துள்ளார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications