Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் ஊதியம் பெற மாட்டேன்.. நிபந்தனையை கேட்டு திகைத்து போன முதல்வர்.. நிஜ ஜெயபீம் சந்துரு

Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்கு ஊதியம் தேவையில்லை என முதல்வர் ஸ்டாலினிடம் கூறிய போது அவர் திகைத்து போனார் என நீதியரசர் சந்துரு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் நீதிபதி கே சந்துரு. இவர் நீதிபதியாக இருந்த காலத்தில் 96 ஆயிரம் வழக்கபகளை தீர்த்து வைத்துள்ளார். 1993 ஆம் ஆண்டு சாதி பாகுபாடுகளுக்கு எதிராகவும், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகவும் போராடியதற்காக நீதிபதி சந்துரு கொண்டாடப்படுகிறார்.

Retired Judge Chandru says that he is not getting any payment from TN government

அந்த சம்பவத்தை மையமாக கொண்டு ஜெய்பீம் படம் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதில் நீதிபதி சந்துருவின் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். இவர் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுக்களைத் தடை செய்வது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இது தொடர்பான அறிக்கையை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்திருந்தார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலின பள்ளி மாணவர் சின்னத்துரையும் அவருடைய சகோதரியும் சக மாணவர்களால் தாக்கப்பட்டார். பள்ளி படிக்கும் போதோ ஜாதி எனும் விஷச்செடி மாணவர்கள் மத்தியில் வேரூன்றி இருப்பதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டிருந்தார். சம்பந்தப்பட்ட பள்ளியில் சந்துரு ஆய்வு நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடை, பள்ளி கல்லூரிகளிடையே ஜாதி வன்முறைகள் தடுப்பு தொடர்பான ஆணையங்களை தலைமை வகிப்பது குறித்து சந்துரு கூறியிருப்பதாவது: மாநில அரசால் அமைக்கப்படும் ஆணையங்களை தலைமை வகிக்க எந்த ஊதியமும் பெறுவதில்லை. எனக்கு ஓய்வூதியம் வருகிறது, அது போதும்.

ஆணையத்தின் தலைவராக நியமிக்கும் போதே எந்த ஊதியத்தையும் கவுரவத்தையும் பெற மாட்டேன் என நிபந்தனையுடன்தான் இந்த பொறுப்புகளை ஏற்றுக் கொண்டேன். நான் சொன்னதை கேட்டு முதல்வர் ஸ்டாலின் திகைத்து போனார். நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு ஊதிய பணிகளை பெற அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த எண்ணத்தை அகற்ற வேண்டும் என சந்துரு தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+