நான் ஊதியம் பெற மாட்டேன்.. நிபந்தனையை கேட்டு திகைத்து போன முதல்வர்.. நிஜ ஜெயபீம் சந்துரு
சென்னை: எனக்கு ஊதியம் தேவையில்லை என முதல்வர் ஸ்டாலினிடம் கூறிய போது அவர் திகைத்து போனார் என நீதியரசர் சந்துரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் நீதிபதி கே சந்துரு. இவர் நீதிபதியாக இருந்த காலத்தில் 96 ஆயிரம் வழக்கபகளை தீர்த்து வைத்துள்ளார். 1993 ஆம் ஆண்டு சாதி பாகுபாடுகளுக்கு எதிராகவும், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகவும் போராடியதற்காக நீதிபதி சந்துரு கொண்டாடப்படுகிறார்.

அந்த சம்பவத்தை மையமாக கொண்டு ஜெய்பீம் படம் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதில் நீதிபதி சந்துருவின் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். இவர் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுக்களைத் தடை செய்வது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இது தொடர்பான அறிக்கையை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்திருந்தார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலின பள்ளி மாணவர் சின்னத்துரையும் அவருடைய சகோதரியும் சக மாணவர்களால் தாக்கப்பட்டார். பள்ளி படிக்கும் போதோ ஜாதி எனும் விஷச்செடி மாணவர்கள் மத்தியில் வேரூன்றி இருப்பதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டிருந்தார். சம்பந்தப்பட்ட பள்ளியில் சந்துரு ஆய்வு நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடை, பள்ளி கல்லூரிகளிடையே ஜாதி வன்முறைகள் தடுப்பு தொடர்பான ஆணையங்களை தலைமை வகிப்பது குறித்து சந்துரு கூறியிருப்பதாவது: மாநில அரசால் அமைக்கப்படும் ஆணையங்களை தலைமை வகிக்க எந்த ஊதியமும் பெறுவதில்லை. எனக்கு ஓய்வூதியம் வருகிறது, அது போதும்.
ஆணையத்தின் தலைவராக நியமிக்கும் போதே எந்த ஊதியத்தையும் கவுரவத்தையும் பெற மாட்டேன் என நிபந்தனையுடன்தான் இந்த பொறுப்புகளை ஏற்றுக் கொண்டேன். நான் சொன்னதை கேட்டு முதல்வர் ஸ்டாலின் திகைத்து போனார். நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு ஊதிய பணிகளை பெற அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த எண்ணத்தை அகற்ற வேண்டும் என சந்துரு தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications