இந்துக்கள் ஆன்மீக பற்றை வெளிப்படுத்தக் கூடாது! ஜெய்ஸ்ரீராம் கூறிய நடிகை ரேவதி..நெட்டிசன்கள் கண்டனம்
சென்னை: மற்ற மதத்தினரின் நம்பிக்கைகளை காயப்படுத்தக் கூடாது என்பதால் இந்துக்களாகிய நாம் நம் நம்பிக்கைகளை நமக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும் என ராமர் கோயில் குறித்து நடிகை ரேவதி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
உத்தரப்பிரேதச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ரூ 2000 கோடியில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் நிலநடுக்கம் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 22 ஆம் தேதி திறந்து வைத்தார். உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
200 கிலோ எடை கொண்ட கல்லால் ஆன பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிலைக்கு கண் திறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். வரலாற்று சிறப்பு வாய்ந்த அயோத்தி ராமர் கோயிலை வெற்றிகரமாக கட்டி முடித்ததற்கு பாஜக அரசுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு சில எதிர்ப்புகளும் கிளம்பின. நடிகை பார்வதியும் தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் 1949 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தில் இறையாண்மை, சமத்துவம், மதசார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு நாடாக இந்தியா எப்போது இருக்கும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அவர் ஷேர் செய்த இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தை பலரும் ஷேர் செய்தனர். இந்த நிலையில் நடிகை ரேவதியின் பதிவு பெரும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்ட தினத்தை மறக்கவே முடியாது.

அயோத்தி கோயிலுக்குள் குழந்தை ராமர் வருவதை பார்த்த போது எனக்குள் எழுந்த உணர்வு அப்படி இருந்தது. எனக்குள் உணர்வு ரீதியான கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் விசித்திரமான விஷயம் என்னன்னு கேட்டீங்கன்னா, இந்துக்களாக இருப்பவர்கள் நமது மத நம்பிக்கைகளை நமக்குள் மட்டுமே வைத்திருக்கிறோம்.
பிற மத உணர்வுகளை காயப்படுத்தக் கூடாது என நினைத்து நாம் அப்படி செய்கிறோம். மதசார்பற்ற இந்தியாவில் நமது ஆன்மீக நம்பிக்கைகளை வெளிப்படுத்தக் கூடாது என்ற நிலைதான் இருக்கிறது. ஸ்ரீராமரின் வருகை, பல விஷயங்களை பலரிடம் மாற்றியுள்ளது. நாம் எல்லாம் ராமரின் பக்தர்கள் என உறக்க சொல்வோம், முதல்முறையாக சொல்வோம். ஜெய் ஸ்ரீராம் என ரேவதி குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவு வைரலாகி வருகிறது. இத்தனை நாட்கள் உங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்த யார் தடுத்தது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications