திடீரென.. கோபாலபுர வீட்டிற்குள் நுழைந்த அழகிரி.. ரூ.2500 பரிசு தந்த எடப்பாடியார்.. திணற வைத்த 2020!
தமிழகத்தில் இந்த வருடம் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதுவாகும்
சென்னை: எத்தனையோ சம்பவங்கள் அரசியல் உலகில் நிகழ்ந்து வருகின்றன.. அதில் நம்மை ஈர்ப்பதும், பரபரப்பில் வைப்பதும் ஒருசில நிகழ்வுகளே.. அந்த வகையில் 2020-ம் ஆண்டை திரும்பி பார்த்தால், குறிப்பிட்ட 5 சம்பவங்கள் மனதில் தோன்றி மறைகின்றன.. அவைகள்தான் இவை:
வழக்கமாக அதாவது கால் நூற்றாண்டு காலமாக ரஜினி அரசியல் பரபரப்பை தரும் என்றாலும், இந்த வருடம் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாகி விட்டது.. ஒரே ஒரு வித்தியாசம், அந்த பரபரப்பு எல்லாம் ஊடகங்கள் ஏற்படுத்தியவை.. இந்த வருட பரபரப்பு ரஜினியே பேட்டிகளை தந்து, அரசியலுக்கு வருவேன் என்று உறுதி சொன்னார்.. அதனால்தான் பெரும் எதிர்பார்ப்பு, பெரும் ஏமாற்றத்தில் முடிந்துவிட்டது.

அடுத்ததாக, கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை என்று அறிவிப்பு வந்தது நான்காம் இடத்தில் உள்ளது.. ஏனென்றால், வழக்கமாக ஒவ்வொரு வருடம் புத்தாண்டு தினத்தன்றும் பீச்சில்தான் புத்தாண்டை கொண்டாடுவர்.. ஆனால், இந்த முறை அனுமதி இல்லை என்றதும் மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.. கொரோனா காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டாலும், மக்கள் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர்,.
பொங்கல் பரிசாக 2500 ரூபாய் எடப்பாடி அரசு தந்தது 3-வது இடத்தை பிடித்துள்ளது.. காரணம், இந்த லாக்டவுனில் நிறைய பேருக்கு வேலை இல்லை.. சாப்பிட வழியும் இல்லை.. தமிழக அரசு மீது சிலர் கோபமாகவும் இருந்தனர்.. அப்படிப்பட்ட நேரத்தில் முதல்வர் இப்படி ஒரு தித்திப்பான அறிவிப்பை வெளியிட்டதுடன், அதை செயல்படுத்தியும் காட்டியது அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
அடுத்தாக, கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை என்று அறிவிப்பு வந்தது நான்காம் இடத்தில் உள்ளது.. ஏனென்றால், வழக்கமாக ஒவ்வொரு வருடம் புத்தாண்டு தினத்தன்றும் பீச்சில்தான் புத்தாண்டை கொண்டாடுவர்.. ஆனால், இந்த முறை அனுமதி இல்லை என்றதும் மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.. கொரோனா காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டாலும், மக்கள் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர்,.
புதிய கட்சி குறித்து முக்கிய முடிவை ஜனவரி 3-ம் தேதி அறிவிக்க போகிறாராம் முக அழகிரி.. இதுதான் இந்த வருடம் பரபரப்பை எகிற வைத்தது மற்றொரு நிகழ்வாகும்.. ஏற்கனவே தங்கள் அதிருப்தியாளர்கள் அழகிரி பக்கம் சென்றுவிடுவார்களோ என்ற கிலியில் திமுக தலைமை இருக்கும்போது, அழகிரியின் இந்த திடீர் அறிவிப்பு மேலும் கலக்கத்தை உண்டுபண்ணி வருகிறது. இப்படி அடுத்தடுத்த நிகழ்வுகளால், அதிரடி செயல்களால் இந்த வருடம் கழிந்துள்ளது..












Click it and Unblock the Notifications