Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்னோவா காரை விடுங்க! பையனுக்கு ஃபீஸ் கட்டுவீங்களானு கேட்ட நாஞ்சில் சம்பத்! ஆர்.ஜே.பாலாஜி உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாஞ்சில் சம்பத் இன்னோவா கார் வாங்கிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தாலும் அவர் தனது மகனுக்கு கல்லூரி கட்டணம் கட்டுவீர்களா என தன்னிடம் கேட்டதாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருந்தார்.

நாஞ்சில் சம்பத், தற்போது தவெகவில் இணைந்துள்ளார். அவர் ஏற்கனவே திமுகவில் இருந்தார். பின்னர் வைகோ மதிமுக தொடங்கியதும் அந்த கட்சியில் இணைந்தார். பின்னர் வைகோவின் மதிமுகவில் இணைந்தார்.

rj balaji nanjil sampath

அங்கும் அவருடன் கருத்து மோதல் ஏற்பட்டதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அப்போது நாஞ்சில் சம்பத்துக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியை கொடுத்த ஜெயலலிதா, தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இன்னோவா காரையும் கொடுத்தார்.

பின்னர் ஜெயலலிதா மறைந்ததும் டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்தார். அவர் அமமுக தொடங்கியதும் கட்சியின் பெயரில் திராவிடமும் இல்லை, அண்ணாவும் இல்லை என கூறிய அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

எனினும் அவர் திமுக ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருந்தார். திமுக பொதுக் கூட்டங்களில் பேசி வந்தார். இந்த நிலையில் திமுகவினர், தன்னை காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளால் வசைபாடுவதாக கூறி தவெகவில் இணைந்தார்.

மேலும் திமுகவில் ஒரு சைக்கிள் கூட கிடைக்காது என்றெல்லாம் கூறியிருந்தார். இதனால் நாஞ்சில் சம்பத்தை திமுகவினர் விமர்சித்தனர். அதிமுகவில் இன்னோவா காரை வாங்கிவிட்டு, திமுகவில் லட்சக்கணக்கான பணத்தை ஊதியமாக பெற்றுக் கொண்டு தற்போது கட்சி மாறிவிட்டார் என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஆர்.ஜே. பாலாஜி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், "நாஞ்சில் சம்பத் இன்னோவா கார் வாங்கிவிட்டார். நிறைய கட்சி மாறிவிட்டார்னு நிறைய மீம் பார்த்திருக்கிறோம். ஆனால் எல்கேஜி படத்திற்கு அவர நடிக்க கேட்கலாம்னு அவரது வீட்டிற்கு சென்றேன்.

அப்போது ஹவுசிங் போர்டுல 600 சதுர அடி வீட்டில்தான் அவர் இருந்தார். அதுதான் அவரது வீடுனு என்கிட்ட சொன்ன போதே ஆச்சரியமாக இருந்தது. நான் போய் அவர் கிட்ட என் படத்துல நடிக்கணும்னு கேட்டப்ப, "நான் நடிக்கிறேன், என் பையனுக்கு ஃபீஸ் கட்டுவீங்களா"ன்னு கேட்டார்.

இன்று அரசியலில் இருப்பவர்கள் சொந்தமாக காலேஜே கட்டி விடும் நிலையில் 40 ஆண்டுகளாக அரசியல்ல இருக்கும் ஒருத்தர் பிள்ளைக்கு ஃபீஸ் கட்ட கேட்டது எனக்கு பெரிய அதிர்ச்சி" என ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளை ஊரை சேர்ந்தவர். இவர் நாகர்கோவிலில் உள்ள இந்து கல்லூரியில் படித்தார். இவருக்கு மனைவி சசிகலா, குழந்தைகள் மதிவதனி, சரத் பாஸ்கரன் ஆகிய இருவர் உள்ளனர்.

கடந்த மார்ச் 1, 2009 அன்று திருப்பூரில் 'நாதியற்றவனா தமிழன்?' என்ற தலைப்பில், அனைத்து மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசினார். அதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நாஞ்சில் சம்பத்துக்காக மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ வாதாடினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+