இன்னோவா காரை விடுங்க! பையனுக்கு ஃபீஸ் கட்டுவீங்களானு கேட்ட நாஞ்சில் சம்பத்! ஆர்.ஜே.பாலாஜி உருக்கம்
சென்னை: நாஞ்சில் சம்பத் இன்னோவா கார் வாங்கிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தாலும் அவர் தனது மகனுக்கு கல்லூரி கட்டணம் கட்டுவீர்களா என தன்னிடம் கேட்டதாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருந்தார்.
நாஞ்சில் சம்பத், தற்போது தவெகவில் இணைந்துள்ளார். அவர் ஏற்கனவே திமுகவில் இருந்தார். பின்னர் வைகோ மதிமுக தொடங்கியதும் அந்த கட்சியில் இணைந்தார். பின்னர் வைகோவின் மதிமுகவில் இணைந்தார்.

அங்கும் அவருடன் கருத்து மோதல் ஏற்பட்டதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அப்போது நாஞ்சில் சம்பத்துக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியை கொடுத்த ஜெயலலிதா, தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இன்னோவா காரையும் கொடுத்தார்.
பின்னர் ஜெயலலிதா மறைந்ததும் டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்தார். அவர் அமமுக தொடங்கியதும் கட்சியின் பெயரில் திராவிடமும் இல்லை, அண்ணாவும் இல்லை என கூறிய அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
எனினும் அவர் திமுக ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருந்தார். திமுக பொதுக் கூட்டங்களில் பேசி வந்தார். இந்த நிலையில் திமுகவினர், தன்னை காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளால் வசைபாடுவதாக கூறி தவெகவில் இணைந்தார்.
மேலும் திமுகவில் ஒரு சைக்கிள் கூட கிடைக்காது என்றெல்லாம் கூறியிருந்தார். இதனால் நாஞ்சில் சம்பத்தை திமுகவினர் விமர்சித்தனர். அதிமுகவில் இன்னோவா காரை வாங்கிவிட்டு, திமுகவில் லட்சக்கணக்கான பணத்தை ஊதியமாக பெற்றுக் கொண்டு தற்போது கட்சி மாறிவிட்டார் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் ஆர்.ஜே. பாலாஜி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், "நாஞ்சில் சம்பத் இன்னோவா கார் வாங்கிவிட்டார். நிறைய கட்சி மாறிவிட்டார்னு நிறைய மீம் பார்த்திருக்கிறோம். ஆனால் எல்கேஜி படத்திற்கு அவர நடிக்க கேட்கலாம்னு அவரது வீட்டிற்கு சென்றேன்.
அப்போது ஹவுசிங் போர்டுல 600 சதுர அடி வீட்டில்தான் அவர் இருந்தார். அதுதான் அவரது வீடுனு என்கிட்ட சொன்ன போதே ஆச்சரியமாக இருந்தது. நான் போய் அவர் கிட்ட என் படத்துல நடிக்கணும்னு கேட்டப்ப, "நான் நடிக்கிறேன், என் பையனுக்கு ஃபீஸ் கட்டுவீங்களா"ன்னு கேட்டார்.
இன்று அரசியலில் இருப்பவர்கள் சொந்தமாக காலேஜே கட்டி விடும் நிலையில் 40 ஆண்டுகளாக அரசியல்ல இருக்கும் ஒருத்தர் பிள்ளைக்கு ஃபீஸ் கட்ட கேட்டது எனக்கு பெரிய அதிர்ச்சி" என ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளை ஊரை சேர்ந்தவர். இவர் நாகர்கோவிலில் உள்ள இந்து கல்லூரியில் படித்தார். இவருக்கு மனைவி சசிகலா, குழந்தைகள் மதிவதனி, சரத் பாஸ்கரன் ஆகிய இருவர் உள்ளனர்.
கடந்த மார்ச் 1, 2009 அன்று திருப்பூரில் 'நாதியற்றவனா தமிழன்?' என்ற தலைப்பில், அனைத்து மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசினார். அதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நாஞ்சில் சம்பத்துக்காக மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ வாதாடினார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications