ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்
சென்னை: ஜனநாயகன் திரைப்படம் கசிவு தொடர்பாக இயக்குநர் அமீர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும். தவறு செய்தவர்களுக்கு மத்திய அரசு தண்டனை விதித்திருக்கிறது. அந்த தண்டனை அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கப்பெறும். அதேபோல திரைப்படத்தை இணையத்தில் கசிய விட்டவர்கள். தவறு செய்தவர் எங்கள் சங்கத்தை சேர்ந்தவராக இருந்தால் அவர் இனி சினிமாவிலேயே இருக்க மாட்டார் என பெப்சி யூனியன் தலைவர் ஆர் கே செல்வமணி தெரிவித்தார்.
ஜனநாயகன் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் கசிந்ததை எடுத்து நேற்றைக்கு சிபிசிஐடி போலீசார் 6 பேர் மீது வழக்கு தொடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் பலரும் இது ஒரு எடிட்டட் வெர்ஷன் என்று தவறுதலாக புரிதல் இல்லாமல் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீர் இது முழுக்க எடிட்டர்ஸ் வெர்ஷனில் இருந்து தான் வெளிவந்திருக்கிறது என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் சென்னை அசோக் நகரில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சமையல் என அலுவலகத்தில் அதன் தலைவர் ஆர் கே செல்வமணியும் எடிட்டர்ஸ் யூனியன் தலைவர் கோபியும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
எடிட்டர்ஸ் யூனியன் தலைவர் கோபி செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜனநாயகன் வெளியே காசிந்ததில் மிகவும் வருத்தம் அளிக்கிறது. ரிலீஸ் தேதியானது ஜனவரி 9 என இருந்திருக்கக் கூடிய அந்த வேலையில் படம் தள்ளிப்போனது அப்போது படத்தின் இயக்குனர் எச் வினோத் படத்தில் ஒரு சில காட்சிகளை மெருகேற்றுவதற்காக 5 மொழிக்கான ஒலிக்கலவைக்காக படம் ஹைதராபாத்துக்கு அனுப்பப்பபட்ட்து.
எங்கள் தரப்பில் படம் கசிய விடப்படவில்லை. படத்தின் எடிட்டர் மீது சந்தேகம் கொள்வது வருத்தமளிக்கிறது. உண்மை தெரியும் வரை யாரையும் பழி சொல்லாதீர். காவல்துறை விசாரணை சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் குற்றவாளிகள் யார் என்பது அடையாளப்படுத்தப்படுவார்கள்.
பெப்சி யூனியன் தலைவர் செல்வமணி செய்தியாளர்களிடம் கூறுகையில்," சினிமா டிஜிட்டலாக மாறிய பிறகு படத்தின் காப்பி ஒருவரிடம் மட்டுமே இருப்பது இல்லை. ஜனநாயகன் விவகாரம் எங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அடித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். எடிட்டர்ஸ் ஒரு வேளை தவறு செய்யக் கூடியவர்கள் என்றால், அவர்களினுடைய வாட்டர் மார்க் லோகோவை எப்படி பதிந்து வெளியிடுவார்கள். உதாரணத்திற்கு வங்கியை கொள்ளையடிக்க கூடியவன், எங்காவது அடையாள அட்டையை விட்டு செல்வானா? காவல்துறை குற்றவாளிகளை நெருங்கி விட்டனர். ஒரு வாரத்துக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என நம்புகிறோம்.
இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும். தவறு செய்தவர்களுக்கு மத்திய அரசு தண்டனை விதித்திருக்கிறது. அந்த தண்டனை அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கப்பெறும். அதேபோல திரைப்படத்தை இணையத்தில் கசிய விட்டவர்கள். *தவறு செய்தவர் எங்கள் சங்கத்தை சேர்ந்தவராக இருந்தால் அவர் இனி சினிமாவிலேயே இருக்கமாட்டார். அப்படி இருக்கக்கூடிய பட்சத்தில் நிச்சயமாக அவர் எங்களது யூனியனில் இனிமேல் வேலை செய்யவே முடியாத ஒரு சூழ்நிலை உருவாகும்" இவ்வாறு செல்வமணி கூறினார்.
-
ஜனநாயகன் தயாரிப்பாளருக்காக விஜய் எடுத்த பெரிய முடிவு.. மூன்று பேருக்குள் போட்டி! ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் -
ஜனநாயகன் லீக்.. குற்றவாளிகளை சும்மா விடக்கூடாது! பிரதமர் மோடி தலையிடணும்.. IMPPA சங்கம் டிமாண்ட் -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
‘ஜனநாயகன்’ லீக் ஆனது தவறு இல்ல.. ஆதங்கத்துடன் நடிகர் சூரி போஸ்ட்.. விஜய்க்கு சப்போர்ட்டுக்கு வந்த விஜய் தேவரகொண்டா -
ஜனநாயகன் படம் லீக்.. 'அவர்' ஒருவரை தவிர அனைவரும் கண்டிப்பு -
மொத்தமும் போச்சா.. ஜனநாயகன் படத்தை ஒளிபரப்பிய கோவை உள்ளூர் சேனல்.. காவல்துறையும் கைவிரிப்பு -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
ஜனநாயகன் படம் லீக்கான விவகாரம்.. சிபிஎப்சிதான் காரணமா? தணிக்கை வாரியம் பரபர விளக்கம் -
ஜனநாயகன் படத்தை இணையத்தில் லீக் செய்தது விஜய்யா? சென்சாரா? புது பாயிண்ட் சொல்லும் எஸ்.வி.சேகர் -
ஜனநாயகன் படத்தை வெளியிட்ட விஷக்கிருமிகள்.. அடித்து சொன்ன அண்ணாமலை.. சிபிஐ வராங்களாமே -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன்












Click it and Unblock the Notifications