ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்
சென்னை: ஜனநாயகன் திரைப்படம் கசிவு தொடர்பாக இயக்குநர் அமீர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும். தவறு செய்தவர்களுக்கு மத்திய அரசு தண்டனை விதித்திருக்கிறது. அந்த தண்டனை அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கப்பெறும். அதேபோல திரைப்படத்தை இணையத்தில் கசிய விட்டவர்கள். தவறு செய்தவர் எங்கள் சங்கத்தை சேர்ந்தவராக இருந்தால் அவர் இனி சினிமாவிலேயே இருக்க மாட்டார் என பெப்சி யூனியன் தலைவர் ஆர் கே செல்வமணி தெரிவித்தார்.
ஜனநாயகன் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் கசிந்ததை எடுத்து நேற்றைக்கு சிபிசிஐடி போலீசார் 6 பேர் மீது வழக்கு தொடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் பலரும் இது ஒரு எடிட்டட் வெர்ஷன் என்று தவறுதலாக புரிதல் இல்லாமல் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீர் இது முழுக்க எடிட்டர்ஸ் வெர்ஷனில் இருந்து தான் வெளிவந்திருக்கிறது என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் சென்னை அசோக் நகரில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சமையல் என அலுவலகத்தில் அதன் தலைவர் ஆர் கே செல்வமணியும் எடிட்டர்ஸ் யூனியன் தலைவர் கோபியும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
எடிட்டர்ஸ் யூனியன் தலைவர் கோபி செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜனநாயகன் வெளியே காசிந்ததில் மிகவும் வருத்தம் அளிக்கிறது. ரிலீஸ் தேதியானது ஜனவரி 9 என இருந்திருக்கக் கூடிய அந்த வேலையில் படம் தள்ளிப்போனது அப்போது படத்தின் இயக்குனர் எச் வினோத் படத்தில் ஒரு சில காட்சிகளை மெருகேற்றுவதற்காக 5 மொழிக்கான ஒலிக்கலவைக்காக படம் ஹைதராபாத்துக்கு அனுப்பப்பபட்ட்து.
எங்கள் தரப்பில் படம் கசிய விடப்படவில்லை. படத்தின் எடிட்டர் மீது சந்தேகம் கொள்வது வருத்தமளிக்கிறது. உண்மை தெரியும் வரை யாரையும் பழி சொல்லாதீர். காவல்துறை விசாரணை சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் குற்றவாளிகள் யார் என்பது அடையாளப்படுத்தப்படுவார்கள்.
பெப்சி யூனியன் தலைவர் செல்வமணி செய்தியாளர்களிடம் கூறுகையில்," சினிமா டிஜிட்டலாக மாறிய பிறகு படத்தின் காப்பி ஒருவரிடம் மட்டுமே இருப்பது இல்லை. ஜனநாயகன் விவகாரம் எங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அடித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். எடிட்டர்ஸ் ஒரு வேளை தவறு செய்யக் கூடியவர்கள் என்றால், அவர்களினுடைய வாட்டர் மார்க் லோகோவை எப்படி பதிந்து வெளியிடுவார்கள். உதாரணத்திற்கு வங்கியை கொள்ளையடிக்க கூடியவன், எங்காவது அடையாள அட்டையை விட்டு செல்வானா? காவல்துறை குற்றவாளிகளை நெருங்கி விட்டனர். ஒரு வாரத்துக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என நம்புகிறோம்.
இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும். தவறு செய்தவர்களுக்கு மத்திய அரசு தண்டனை விதித்திருக்கிறது. அந்த தண்டனை அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கப்பெறும். அதேபோல திரைப்படத்தை இணையத்தில் கசிய விட்டவர்கள். *தவறு செய்தவர் எங்கள் சங்கத்தை சேர்ந்தவராக இருந்தால் அவர் இனி சினிமாவிலேயே இருக்கமாட்டார். அப்படி இருக்கக்கூடிய பட்சத்தில் நிச்சயமாக அவர் எங்களது யூனியனில் இனிமேல் வேலை செய்யவே முடியாத ஒரு சூழ்நிலை உருவாகும்" இவ்வாறு செல்வமணி கூறினார்.












Click it and Unblock the Notifications