RN ரவி மகளின் அடடே விளக்கம்.. டாலருக்கு எதிராக 100ஐ தொட்ட ரூபாயின் மதிப்பு! வெறும் நம்பர்தானாம்
சென்னை: அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வேகமாக சரிந்து வருகிறது. இப்படி இருக்கையில், இதெல்லாம் வெறும் நம்பர்தான் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் மகளும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஷமிகா ரவி கூறியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 100 என்ற இலக்கை நோக்கிச் சரிந்து வருவது குறித்து, பொதுமக்களும் சந்தையும் தேவையில்லாமல் பீதியடையத் தேவையில்லை என்று ஷமிகா ரவி கூறியுள்ளார் என்று நியூஸ்கிராம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்கா - ஈரான் போர் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத் தட்டுப்பாடு போன்ற வெளிப்புற உலகச் சந்தையின் அழுத்தங்களுக்கு ஏற்ப, இந்திய ரூபாயின் மதிப்பை ரிசர்வ் வங்கி வலுக்கட்டாயமாக ஒரு குறிப்பிட்ட எல்லையில் (உதாரணமாக 95 அல்லது 96-ல்) பிடித்து வைக்க முயலக் கூடாது. மாறாக, சர்வதேசச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ரூபாய் அதன் உண்மையான மதிப்பைத் தானே அடைந்து நிலைபெற அனுமதிக்க வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்.
பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை ஒரு பிரஷர் குக்கருடன் ஒப்பிட்டு அவர் விளக்கியுள்ளார். குக்கருக்குள் அழுத்தம் அதிகரிக்கும் போது, அதன் வால்வு எவ்வாறு அழுத்தத்தை ரிலீஸ் செய்கிறதோ, அதேபோல உலகப் பொருளாதார அழுத்தங்களைச் சமாளிக்கும் ஒரு வால்வாகத்தான் இந்த ரூபாய் மதிப்புச் சரிவு செயல்படுகிறது.
சந்தை தற்போது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் போது, அரசு வலுக்கட்டாயமாகத் தலையிட்டு ரூபாயின் மதிப்பை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் தக்கவைக்க முயன்றால், அது உள்நாட்டில் கடுமையான பணவீக்கத்தையும் இதர குழப்பங்களையும் ஏற்படுத்திவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
காரணம் என்ன?
தற்போதைய ரூபாய் மதிப்புச் சரிவு மற்றும் விலைவாசி உயர்வுக்கு இந்தியாவின் உள்நாட்டுக் கொள்கைகள் காரணம் அல்ல. மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள உலகளாவிய விநியோகச் சங்கிலித் தடை தான் இதற்குக் காரணம்.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88%-ஐ இறக்குமதி செய்கிறது. போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை பகுதி பாதிக்கப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, அதன் தாக்கம் ரூபாயின் மீது பிரதிபலிக்கிறது.
இத்தகைய விநியோகச் சங்கிலித் தட்டுப்பாடு நிலவும் இக்கட்டான சூழலில், விலைகள் உயர்வதைத் தவிர்க்க முடியாது. விலை உயர்வே தேவகையைக் கட்டுப்படுத்தும் சிறந்த வழிமுறை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசுத் தரப்பில் இருந்து சிக்கன நடவடிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன. பொதுமக்கள் வீணான ஆடம்பரச் செலவுகளைக் குறைக்க வேண்டும். மீண்டும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை ஊக்குவிப்பது, தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பது மற்றும் சமையல் எண்ணெய் நுகர்வைக் குறைப்பது போன்ற பொறுப்பான வாழ்க்கை முறையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
உங்களுக்கு அவசரப் பணத் தேவை இருந்தால் எங்களிடம் வாருங்கள்.. ஆர்பிஐ அவசர அழைப்பு.. யாருக்கு? -
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25% தொடரும்.. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications