முந்திரி, பாதாம் என லிஸ்ட் போட்டு.. 8 கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை.. வெளியான சிசிடிவி காட்சிகள்
சென்னை: கோடம்பாக்கத்தில் 8 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தில் உள்ள 8 கடைகளில் கொள்ளையர்கள் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்துச் சென்றனர். ரூ. 30 ஆயிரம், பாதாம், முந்திரி உள்ளிட்ட மளிகை பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இது தொடர்பாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கோடம்பாக்கம் போலீசார் கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கடைகளின் ஷட்டரை உடைத்து உள்ளே செல்வதும், கடைக்குள் சென்றதும் மின்விளக்கைப் போட்டுக் கொண்டு பொருட்களைக் கொள்ளையடிப்பதும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
அதனை போலீசார் கைப்பற்றி கொள்ளையர்களின் அடையாளங்களைக் கொண்டு பழைய குற்றவாளிகளின் படத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கோடம்பாக்கம் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications