"கரெக்டா கொண்டு போய் கொடுத்துட்டா.. இந்தா பிடி 5 லட்சம்".. மெகா மனிதரின் நூதன ஆஃபர்.. பரபர சென்னை!
சென்னை:பரபரப்பான தகவல் ஒன்று தமிழக அரசியலை வட்டமடித்து கொண்டிருக்கிறது.. ஆனால், இது வதந்தியா, உண்மையா என்று தெரியாத நிலையில், அனைத்து கட்சிகளும் மூக்கின் மீது விரலை வைத்து கொண்டிருக்கின்றன.
தேர்தல் காலம் வந்துவிட்டதால், தேர்தல் ஆணைய செயல்பாடுகளும் கெடுபிடிகளில் உள்ளன.. ஆட்சியை தக்க வைக்க அதிமுகவும், ஆட்சியை பிடிக்க திமுகவும் படு மும்முரத்தில் இறங்கி உள்ளன.

வழக்கம்போல, தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுபொருட்கள் போன்றவையும் திரைமறைவில் வழங்கப்பட்டு வருவதாக செய்திகள் ஆங்காங்கே வந்து கொண்டிருக்கின்றன.. இவர்களைதான் தேர்தல் பறக்கும்படையினர் குறி வைத்து பிடித்து வருகிறார்கள்.
இதனால், "ஒரு மெகா மனிதர்" பணப்பட்டுவாடா குறித்து வேற லெவலில் பிளான் செய்திருக்கிறாராம். அதாவது 1 கோடி ரூபாயை, அவர் சொல்லும் குறிப்பிட்ட இடத்துல அரசு அதிகாரிகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் கொண்டு போய் சேர்த்துவிட்டால், அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் கமிஷன் தந்துடுவாராம்..
இப்படி ஒரு அறிவிப்பை அவர் அறிவிக்கவும், இதற்கு சில அதிகாரிகள் மத்தியில் போட்டா போட்டி எழுந்துள்ளதாம்.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை...!
எனினும் இந்த நூதன அறிவிப்பினை மற்ற கட்சிகள் அரண்டு போய் பார்த்து வருகின்றன.. என்னதான் புரண்டாலும், ஒட்டற மண்ணுதானே ஒட்டும் என்பது ஒருபக்கம் இருந்தாலும், தேர்தல் பறக்கும் படையினர் விதிமீறல்களில் ஈடுபடுவோரை பாய்ந்து பிடிக்க ரெடியாக உள்ளனர்...!












Click it and Unblock the Notifications