Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரப்போகுது.. தமிழ்நாட்டில் 22 இடங்களில் 'ரோப் கார்'.. எங்கெங்கே தெரியுமா? ரெடி ஆகிறது ரிப்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 22 இடங்களில் ரோப் கார் வசதி செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலைக்கு ஏராளமான பக்தர்கள் தினசரி வருகை புரிந்து, சாமி தரிசனம் செய்வது வழக்கம். மலையில் இருக்கும் தண்டாயுதமாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, யானைப் பாதை ஆகியவை பிரதான வழியாக உள்ளது. அத்துடன் மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப் கார் இயக்கப்படும். பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது ரோப் கார் சேவை.

Rope car facility to come in 22 locations in tamilnadi

இந்நிலையில், போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கத்தில் நாடு முழுதும் மலை பிரதேசங்கள், மலை கோவில்கள், கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில், போக்குவரத்தை எளிதாக்குவதற்கு, ரோப் கார் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் தனிப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் 22 இடங்களில் ரோப் கார் சேவையை தொடங்குவதற்கான சாத்திய கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை, திண்டுக்கல், நீலகிரி, கோவை, தேனி, நாமக்கல், சேலம், திருச்சி, தென்காசி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விருதுநகர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், ரோப் கார் வசதியை ஏற்படுத்த திட்டமிட்டு, அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பெசன்ட் நகருக்கும், பழனி முதல் கொடைக்கானல் வரையும், ஊட்டி முதல் பைக்காரா, குரங்கணி முதல் டாப் ஸ்டேஷன், கொல்லிமலை, ஏற்காடு, திருச்சி மலைக்கோட்டை, குற்றாலம், கொடைக்கானல் ஸ்டார் ஏரி, திருமலை கோவில், சதுரகிரி, பர்வதமலை, அகத்தியர் அருவி, திருநீர்மலை,திருச்செங்கோடு, திருக்கழுக்குன்றம், திருத்தணி உள்ளிட்ட இடங்கள் தேர்வாகியுள்ளன.

இங்கெல்லாம் ரோப் கார் வசதியை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணிகளை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடங்கியுள்ளது. ரோப் கார் சேவை சாத்தியமுள்ளதா என ஆராய்ந்து, சாத்தியமுள்ள இடங்களின் பட்டியல் இரண்டு மாதங்களில் இறுதி செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. அதன்பிறகு திட்ட மதிப்பீடு தயாரிப்பு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+