எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. பாட்டு பாடிய திமுக எம்எல்ஏ.. குறுக்கிட்ட துரைமுருகன்!
சென்னை: ராயபுரம் திமுக எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி முன்னாள் அமைச்சரும் அந்த தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான டி ஜெயக்குமார் குறித்து எம்ஜிஆர் பாடலை பாடினார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் ஒவ்வொரு எம்எல்ஏக்களாக பட்ஜெட் மீதான விவாத உரையை ஆற்றி வருகிறார்கள். அந்த வகையில் இந்த சட்டசபை கூட்டத்தொடரில் காரசார விவாதம், கோபம், கொந்தளிப்பு, ஆறுதல், நகைச்சுவை என களை கட்டி வருகிறது.
இதில் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் ராயபுரம் தொகுதி எம்எல்ஏவாக உள்ள ஐட்ரீம் மூர்த்தி பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது அவர் எம்ஜிஆர் பாடலை பாடினார்.

இந்த நாட்டிலே
அவர் எழுந்தவுடன்
"இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்
பக்தனை போலவே
பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை
வலையினில் மாட்டி
(இன்னும் எத்தனை காலம்தான்....)

சட்டசபை
இப்படித்தான் ராயபுரம் சட்டசபையில் தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக ஒருவர் ஏமாற்றி வந்தார் என ஐட்ரீம் மூர்த்தி விமர்சனம் செய்தார். இதற்கு உடனே அதிமுக எம்எல்ஏக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இவரது பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என கூச்சலிட்டனர்.

நீக்க தேவையில்லை
அப்போது அவை முன்னவர் துரைமுருகன், பொதுவாக அவையில் இல்லாத ஒருவரின் பெயரை சொல்லக் கூடாது. அவ்வாறு பெயர் சொன்னால்தான் தவறு. ஆனால் நம் உறுப்பினர் நீங்கள் ஆட்சேபிக்கும் அளவுக்கு யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லையே. அதனால் அதை நீக்க தேவையில்லை என்றார்.

5 முறை தொகுதி எம்எல்ஏ
கடந்த 5 முறை ராயபுரம் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வந்தவர் முன்னாள் மீன் வளத் துறை அமைச்சர் டி ஜெயக்குமார். அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த போதிலும் அவர் மக்கள் பணியை ஆற்றி வருகிறார். ராயபுரம் தொகுதிக்குள்பட்ட பகுதியில் சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த போது பொதுமக்கள் போராட்டம் நடத்தி எம்எல்ஏ வந்தால்தான் கலைவோம் என்றனர். அது குறித்த வீடியோவை டி ஜெயக்குமார் தனது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
உதயநிதி ஸ்டாலினை மதிக்காத கேஎன் நேரு? எழுந்து நின்றும் கண்டுகொள்ளவில்லையே.. இருவருக்கும் சண்டையா? -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
“பைத்தியக்காரத்தனம்”.. திமுக சட்ட எரிப்பைக் கிண்டல் செய்த பெரியார்? கெடு விதித்த அண்ணா! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி!












Click it and Unblock the Notifications