கொரோனா பரப்பும் மையமான ராயபுரம்.. வைரஸ் பரவியதால் தூய்மை பணியாளர் பலி
சென்னை: வடசென்னையின் ஒரு பகுதியான ராயபுரத்தில் தூய்மை பணி மேற்கொண்ட 58 வயது நபருக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
Recommended Video
ராயபுரம் வடசென்னைக்குள்பட்ட பகுதியாகும். சீனாவுக்கு ஒரு வுகானை போல் சென்னையில் கொரோனா நோய் பரப்பும் மையமாக ராயபுரம், திருவிக நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இந்த ராயபுரத்தில் 490 பேருக்கும், திருவிகா நகரில் 477 பேருக்கும் அது போல் கோடம்பாக்கத்தில் 546 பேருக்கும் கொரோனா பாதிப்புள்ளது. இது நேற்று முன் தினத்தின் நிலவரம். இவ்வாறு தமிழகத்தின் 50 சதவீத கொரோனா கேஸ்கள் சென்னையிலிருந்துதான்.

சென்னை மாநகராட்சி
இந்த நிலையில் நோய் பரப்பும் ராயபுரம் உள்ளிட்டவை கன்டெய்ன்மென்ட் பகுதிகளாகும். இங்கு தூய்மை பணியை 58 வயது நபர் செய்து வந்தார். இவர் சென்னை மாநகராட்சி பணியாளர் ஆவார்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனை
இவர் ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர். இவருக்கு நேற்று முன் தினம் முதல் அதிகமான காய்ச்சல் இருந்தது. இதையடுத்து இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை
அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

கொரோனா பாதிப்பு இல்லை
இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பலியாகும் முதல் தூய்மை பணியாளர் இவர் என கூறப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்னர் ஒரு தூய்மை பணியாளருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டு பலியானார். ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications