எழும்பூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த சிறுமி.. கனநொடியில் காப்பாற்றிய ஆர்பிஎப் வீரர்
சென்னை: சென்னை எழும்பூரில் உழவன் எக்ஸ்பிரஸில் ஏற முயன்ற போது பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிய சிறுமியின் உயிரை ஆர்பிஎப் வீரர் காப்பாற்றினார். அவருக்கு சிறுமியின் தந்தை கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி 20க்கும் மேற்பட்ட ரயில்கள் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயணிக்கிறார்கள்.
கடந்த சனிக்கிழமை இரவு 10.40 மணி அளவில் எழும்பூர் ரயில் நிலையத்தின் 4வது நடைமேடையில் இருந்து தஞ்சாவூருக்கு உழவன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு கொண்டு இருந்தது.

உழவன் எக்ஸ்பிரஸ்
அப்போது பீகாரைச் சேர்ந்த அஸ்வினி குமார் என்பவர் தனது மகள் அனாமல் சர்மாவுடன் தஞ்சாவூருக்கு செல்வதற்காக வந்துள்ளார். ரயில் புறப்பட்டு கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அஸ்வினி குமார் மற்றும் அவரது மகள் ஆகியோர், கையில் பை மற்றும் சூட்கேசுடன் ஓடிப்போய் ஏற முயன்றனர்.

காப்பாற்ற முடியாத தந்தை
அஸ்வினி குமார் முதலில் தனது மகளை ஏற்றிவிட முயற்சித்துள்ளார்.அப்போது ரயில் கொஞ்சம் வேகமாக செல்லவே அனாமல் சர்மா தவறி விழுந்தார். சிறுமி அனாமல் பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். இதனை பார்த்த அஸ்வினி குமார், ஒரு கையில் சூட்கேசை வைத்துக்கொண்ட மற்றொரு கையில் மகளை பிடித்து இழுக்க முயற்சித்தார். ஆனால முடியவில்லை.

காப்பாற்றிய ஆர்பிஎப் வீரர்
அப்போது அங்கு இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஜோஸ்கான், சிறுமி தவறிவிழுந்து உயிருக்கு போராடுவதை பார்த்து உடனடியாக விரைந்து சென்று சிறுமியை பிடித்து பிளாட்பாரத்தில் இருந்து வெளியே இழுத்து உயிரை காப்பாற்றினார்.

கண்ணீர் மல்க நன்றி
இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு அந்த சிறுமிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். அவர்களிடம் ஓடும் ரயிலில் ஏறக்கூடாது என எச்சரித்த போலீசார் சிறுமி மற்றும் தந்தையை அதே ரயிலில் அனுப்பி வைத்தனர். இதையடுத்து சிறுமி அனாமல் மற்றும் அவரது தந்தை ஆகியோர் காப்பாற்றிய ஆர்பிஎப் வீரர் ஜோஸ்கானுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.சிறுமியை போலீசார் காப்பாற்றும் சம்பவம் சென்னை எழும்பூர் ரயில் நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.ஆர்பிஎப் வீரர் ஜோஸ்கானுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications