சுழன்று அடித்த கஜா... தமிழகம் முழுவதும் ரூ.10 ஆயிரம் கோடி சேதம்- தமிழக அரசு தகவல்
Recommended Video

சென்னை: கஜா புயலால் தமிழகத்தில் ரூ. 10 ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலானோர் வீடு, கால்நடைகள், விவசாயம் பயிர்களை இழந்துள்ளனர்.

110 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன. புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
இதேபோல் உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது முதல் கட்டமாக கஜா புயலால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக தமிழக அரசு கணக்கிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக நிவாரணபணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
{document1}












Click it and Unblock the Notifications