வங்கியில் வாரம்தோறும் பணம் எடுக்கிறேன்..ரூ.2 ஆயிரம் யாரிடம் இருக்கு தெரியுமா..சீனுக்கு வந்த எச்.ராஜா
சென்னை: என்கிட்ட ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கூட இல்லை. என்னை மதிரியான சாமானியர்கள் கிட்ட 2 ஆயிரம் ரூபாய் கிடையாது. எனவே 2 ஆயிரம் திரும்ப பெறுவது சரியான முடிவு. மக்களுக்கு பாதிப்பு வராது. என்று எச் ராஜா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வங்கிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை விநியோகிக்கவும் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. சிலர் கருப்பு பணம் பதுக்கியவர்களுக்குத்தான் பாதகம் என்றும் சாமானிய மக்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் எதுவும் இல்லை என்றும் வாதத்தை முன்வைத்து வருகின்றனர்.
எனினும், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. கர்நாடக சட்டமன்ற தேர்தல் படு தோல்வியை மறைக்க ஒற்றை தந்திரம் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் மத்திய அரசின் 2 ஆயிரம் ரூபாய் வாபஸ் குறித்த அறிவிப்பை விமர்சித்து இருந்தார். அதுபோல காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கடுமையாக சாடி வருகின்றன.

நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டி எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, 2 ஆயிரம் ரூபாய் வாபஸ் குறித்த அறிவிப்பை வரவேற்றுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எச்.ராஜா கூறியிருப்பதாவது:
2 ஆயிரம் ரூபாய் நோட்டை நான் பார்த்து எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டது. ஒரு ஆறு மாதமாக நீங்கள் யாராவது பார்த்து இருக்கிறீர்களா.. 2 ஆயிரம் ரூபாய் நோட்டு இப்போது புழக்கத்திலேயே இல்லை. 2 ஆயிரம் ரூபாய் நோட்டு புதிதாக வரவில்லை. வங்கியில் போய் பணம் எடுக்கும் போதும் 2 ஆயிரம் நோட்டு கொடுப்பது இல்லை.

நான் ஒவ்வொரு வாரமும் வங்கியில் பணம் எடுக்கிறேன். வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்கிறேன். 500 ரூபாய் நோட்டுத்தான் கொடுக்கிறேன். 2 ஆயிரம் நோட்டு கொடுப்பது இல்லை. 2 ஆயிரம் நோட்டு பதுக்குபவர்கள் கையில் மட்டும் தான் இருப்பது மத்திய அரசுக்கு தெரிந்து இருக்கிறது.
செப்டம்பர் வரை மாற்றுவதற்கு நேரம் கொடுத்து இருக்கிறார்கள். எந்த ஏடிஎம் முன்னாடியும் நிற்க வேண்டாம். எந்த வங்கியிலும் லைனில் நிற்க வேண்டாம். என்கிட்ட ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கூட இல்லை. என்னை மதிரியான சாமானியர்கள் கிட்ட 2 ஆயிரம் ரூபாய் கிடையாது. எனவே 2 ஆயிரம் திரும்ப பெறுவது சரியான முடிவு. மக்களுக்கு பாதிப்பு வராது.
-
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக












Click it and Unblock the Notifications