வாவ்.. இனி சென்னை அருகேயே ஜாலி பண்ணலாம்! 62 ஏக்கரில் ரூ.400 கோடியில் அமையும் ‛வொண்டர்லா’.. எங்கு?
சென்னை: சென்னை அருகே 62 ஏக்கரில் ரூ.400 கோடி செலவில் புதிதாக வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவுக்கான பூமிபூஜை முடிந்துள்ளது.
விடுமுறை காலங்களில் மக்கள் பொழுதுபோக்குக்காக வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். பலரும் கேரளா, கர்நாடகா, தெலங்கானாவில் உள்ள வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

சிறுவர்கள் முதல்வர் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வகையில் நீர் விளையாட்டுகள், அட்வென்சர்ஸ் கேம்கள் அங்கு இருக்கின்றன. இதனால் பலருக்கும் வொண்டர்லா என்பது ‛பேவரைட் பிளேஸ்' ஆக இருக்கிறது.
இந்நிலையில் தான் தமிழகத்தில் ‛வொண்டர்லா' பொழுதுபோக்கு பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் நீண்டகாலமாக இந்த திட்டம் பல்வேறு காரணங்களால் நிறைவேற்றப்படாமல் போனது. இந்நிலையல் தான் சென்னை அருகே ‛வொண்டர்லா' பொழுதுபோக்கு பூங்கா அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா இள்ளளூர் கிராமத்தில் 62 ஏக்கரில் ரூ.400 கோடி செலவில் ‛வொண்டர்லா' அமைக்கப்பட உள்ளது. இந்த இள்ளளூர் கிராமம் என்பது சென்னையில் இருந்து வெறும் 45 கிலோமீட்டர் தொலைவில் பழைய மகாபலிபுரம் சாலையில் தான் இருக்கிறது. இதன்மூலம் சென்னை அருகேயே ‛வொண்டர்லா' பொழுது போக்கு பூங்கா அமைகிறது.
மேலும் தற்போது ‛வொண்டர்லா' அமையும் கிராமம் என்பது ஓஎம்ஆர் நெடுஞ்சாலையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைய உள்ளது. இதனால் நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும் எனகூறப்படுகிறது. இந்நிலையில் தான் ‛வொண்டர்லா' நிர்வாகம் சார்பில் கட்டுமான பணிக்கான பூமிபூஜை செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ‛வொண்டர்லா' கட்டுமான பணிகள் என்பது தொடங்கி நடைபெற உள்ளது.
தற்போது ‛வொண்டர்லா' என்பது கர்நாடகா தலைநகர் பெங்களூர், கேரளா மாநிலம் கொச்சி மற்றும் ஆந்திர தலைநகர் ஹைதராபாத் ஆகிய இடங்களில் மட்டுமே உள்ளது. ஒடிசாவில் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் சென்னை அருகே ‛வொண்டர்லா' அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வொண்டர்லா இன்னும் சில மாநிலங்களில் பொழுதுபோக்கு பூங்காக்களை தொடங்க முடிவு செய்துள்ளது. அதன்படி மத்திய பிரதேசம், பஞ்சாப், கோவாவில் வொண்டர்லா சார்பில் பொழுதுபோக்கு பூங்காக்களை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயப்பட்டு வருகிறது.
-
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications