வாவ்.. இனி சென்னை அருகேயே ஜாலி பண்ணலாம்! 62 ஏக்கரில் ரூ.400 கோடியில் அமையும் ‛வொண்டர்லா’.. எங்கு?
சென்னை: சென்னை அருகே 62 ஏக்கரில் ரூ.400 கோடி செலவில் புதிதாக வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவுக்கான பூமிபூஜை முடிந்துள்ளது.
விடுமுறை காலங்களில் மக்கள் பொழுதுபோக்குக்காக வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். பலரும் கேரளா, கர்நாடகா, தெலங்கானாவில் உள்ள வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

சிறுவர்கள் முதல்வர் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வகையில் நீர் விளையாட்டுகள், அட்வென்சர்ஸ் கேம்கள் அங்கு இருக்கின்றன. இதனால் பலருக்கும் வொண்டர்லா என்பது ‛பேவரைட் பிளேஸ்' ஆக இருக்கிறது.
இந்நிலையில் தான் தமிழகத்தில் ‛வொண்டர்லா' பொழுதுபோக்கு பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் நீண்டகாலமாக இந்த திட்டம் பல்வேறு காரணங்களால் நிறைவேற்றப்படாமல் போனது. இந்நிலையல் தான் சென்னை அருகே ‛வொண்டர்லா' பொழுதுபோக்கு பூங்கா அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா இள்ளளூர் கிராமத்தில் 62 ஏக்கரில் ரூ.400 கோடி செலவில் ‛வொண்டர்லா' அமைக்கப்பட உள்ளது. இந்த இள்ளளூர் கிராமம் என்பது சென்னையில் இருந்து வெறும் 45 கிலோமீட்டர் தொலைவில் பழைய மகாபலிபுரம் சாலையில் தான் இருக்கிறது. இதன்மூலம் சென்னை அருகேயே ‛வொண்டர்லா' பொழுது போக்கு பூங்கா அமைகிறது.
மேலும் தற்போது ‛வொண்டர்லா' அமையும் கிராமம் என்பது ஓஎம்ஆர் நெடுஞ்சாலையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைய உள்ளது. இதனால் நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும் எனகூறப்படுகிறது. இந்நிலையில் தான் ‛வொண்டர்லா' நிர்வாகம் சார்பில் கட்டுமான பணிக்கான பூமிபூஜை செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ‛வொண்டர்லா' கட்டுமான பணிகள் என்பது தொடங்கி நடைபெற உள்ளது.
தற்போது ‛வொண்டர்லா' என்பது கர்நாடகா தலைநகர் பெங்களூர், கேரளா மாநிலம் கொச்சி மற்றும் ஆந்திர தலைநகர் ஹைதராபாத் ஆகிய இடங்களில் மட்டுமே உள்ளது. ஒடிசாவில் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் சென்னை அருகே ‛வொண்டர்லா' அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வொண்டர்லா இன்னும் சில மாநிலங்களில் பொழுதுபோக்கு பூங்காக்களை தொடங்க முடிவு செய்துள்ளது. அதன்படி மத்திய பிரதேசம், பஞ்சாப், கோவாவில் வொண்டர்லா சார்பில் பொழுதுபோக்கு பூங்காக்களை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயப்பட்டு வருகிறது.
-
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications