‘டெண்டர் முறைகேடு வழக்கு’: உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
டெண்டர் முறைகேடு விவகாரத்தில், 10 வாரத்தில் விசாரணையை முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

எஸ்.பி.வேலுமணி மீது ஆர்.எஸ்.பாரதி புகார் வழக்கு
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிமுக ஆட்சியின்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் அவரது வழக்கில், உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், அவரின் சகாக்களுக்கும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது.

உறவினர் நண்பர்களுக்கு முறைகேடாக டெண்டர்
அமைச்சரின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்ய கோரியிருந்தார். அதேப்போன்று அறப்போர் இயக்கமும் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு தொடர்ந்திருந்தது.

சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து பத்து வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடந்த மாதம் தொடக்கத்தில் உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பான மனுக்களையும் முடித்து வைத்தது.
இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்த மனுவில்," அமைச்சர் என்ற முறையில் கொள்கை முடிவுகளை மட்டுமே எடுத்ததாகவும், மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் தலையிட்டதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி
மேலும், தற்போது மாறியுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, அரசியல். காழ்புணர்ச்சி காரணமாக வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்க முயல்கின்றனர். எனவே இந்த விவகாரத்தில் 10 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்' என கோரப்பட்டுள்ளது.

தமிழக அரசு கேவியட் மனு
முன்னதாக, இந்த விவகாரத்தில் தங்களது தரப்பு வாதங்கள் கேட்காமல் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க கூடாது என வலியுறுத்தும் கேவியட் மனுவை தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த கேவியட் மனுவையும் கருத்தில் கொண்டு விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications