தமிழக கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்படவேண்டும்.. ஜக்கி வாசுதேவ் ட்வீட்- ரஜினிக்கு #
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்படவேண்டும் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் ட்வீட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தமது ட்விட்ட பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது.

ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல.
இவ்வாறு சத்குரு ஜக்கி வாசுதேவ் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கும் டேக் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications