Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐபிஎல்லுக்கு அப்பறம் அதிக ஆக்ரோஷமா? பாண்ட்யா என் ஃப்ரண்டு தான்.. சீக்ரெட்டை பகிர்ந்த சாய் கிஷோர்!

Subscribe to Oneindia Tamil

Sai Kishore Hardik Pandya TNPL
திண்டுக்கல்: தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 கடைசி கட்ட லீக் போட்டிகள் இன்று திண்டுக்கல்லில் நடக்கிறது. இதை அடுத்து டிஎன்பிஎல் போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் திண்டுக்கல் வந்துள்ளன. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் தமிழாஸ் அணியின் கேப்டன் சாய் கிஷோர், ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா உடன் மோதலில் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்தியன் பிரீமியர் லீக் போல தமிழகத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் கடந்த 9 சீசன்களாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல இளம் வீரர்கள் ஐபிஎல்-க்கு சென்று அங்கிருந்து இந்திய அணிக்கும் தேர்வாகியுள்ளனர்.

சாய் சுதர்சன், சாய் கிஷோர், நடராஜன் உள்ளிட்ட பலரை அப்படி குறிப்பிடலாம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் ஒன்பதாவது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை மூன்று கட்டங்களாக நடைபெற்று இருக்கிறது. கோவை, சேலம், நெல்லையில் போட்டிகள் முடிவடைந்து இருக்கும் நிலையில் தற்போது கடைசி கட்ட போட்டிகள் திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்பிஆர் கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் போட்டிகளில் கலந்து கொண்ட அணிகள் திண்டுக்கல் வந்துள்ளன. இன்று நாளையும் நான்கு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ், மதுரை பேன்தஸ் அணியை சந்திக்கிறது. மாலை 7 மணிக்கு தொடங்கும் போட்டியில் கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.

நாளை திருப்பூர் தமிழாஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளும் மோதுகின்றன. அன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன. தொடர்ந்து ஜூலை ஒன்றாம் தேதி குவாலிபயர் 1, இரண்டாம் தேதி எலிமினேட்டர், நான்காம் தேதி குவாலிஃபயர் 2, 6ஆம் தேதி இறுதி போட்டி திண்டுக்கல் என்பிஆர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் போட்டி தொடர்பாக சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் கேப்டன் பாபா அபாரஜித் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் கேப்டன் சாய் சுதர்சன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஹர்திக் பாண்டியா உடனான தனது முதல் குறித்து சாய் சுதர்சன் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர்," டி.என்.பி.எல். கிரிக்கெட் நிறைய வீரர்களை உருவாக்கி இருக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் வீரர்கள் திறமையை வெளிப்படுத்துவது அவசியம். எனவே முழுமனதோடு விளையாடும் போது ஆக்ரோஷத்தை தவிர்க்க முடியாது. அதுவும் விளையாட்டின் ஒரு பகுதியே. அன்றும் அப்படித்தான் நடந்தது. பாண்ட்யா என் நல்ல நண்பர். அது களத்துடன் முடிந்து விட்டது. மீண்டும் பல முறை நாங்கள் பேசினோம்.

டிஎன்பிஎல்லில் எங்கள் அணி நன்றாக அமைந்து இருக்கிறது. திறமையான வீரர்கள் பலர் இருக்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த அணியுடன் களத்தில் இறங்குகிறோம். பந்து வீச்சில் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்காக முழு திறமையையும் பயன்படுத்துகிறேன். அதேபோல் ரன்களை குவிப்பது அவசியம். இதற்காக கடந்த 2 ஆட்டங்களில் முன்வரிசையில் இறங்கி விளையாடினேன். இனிவரும் ஆட்டங்களில் எங்கள் அணி இன்னும் சிறப்பாக விளையாடும். அதற்காக நன்றாக தயாராகி இருக்கிறோம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+