Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தானம் செய்வதற்காகவே சம்பாதிக்கும் சைதை துரைசாமி! 1984லேயே இலவசமாக டைப் ரைட்டிங், ஜெராக்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது ஒரே ஆருயிர் மகன் வெற்றியை இயற்கையிடம் பறிகொடுத்து விட்டு நிர்கதியாக கலங்கி நிற்கிறார் சைதை துரைசாமி. கரூரை பூர்விகமாக கொண்ட இவர் சென்னையில் செட்டிலாகி 40 ஆண்டுகளை கடந்துவிட்டது.

அடுப்பில் உலையை வைத்துவிட்டு அரிசிக்கு பணம் வாங்கி விடலாம் என்று நம்பிக்கையோடு சைதை துரைசாமியை பார்க்கச் செல்லலாம் என அவரை பற்றி நன்கறிந்தவர்கள் கூறுவது உண்டு. அந்தளவுக்கு தான தர்மங்களில் அதீத ஈடுபாடு காட்டுபவர் சைதை துரைசாமி. அப்படிப்பட்டவருக்கா இப்படி ஒரு நிலை வர வேண்டும் என அவரை அறிந்தவர்கள் மட்டுமின்றி அவரை பற்றி கேள்விபட்டவர்களும் ஆதங்கப்படும் நிலையை காண முடிகிறது.

Saidai Duraisamy, who lost his only living son to nature, is left in a state of dismay

1984ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக சைதை துரைசாமி வெற்றிபெற்றதும், தனது தொகுதி மக்கள் அனைவருக்கும் இலவசமாக டைப் ரைட்டிங், இலவசமாக ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். இதுவரை எந்த சட்டமன்ற உறுப்பினரும் செய்யாத காரியம் இது. அதேபோல் தனிப்பட்ட முறையிலும் தன்னை நாடி வருவோருக்கு அவர்களின் தேவையறிந்து உதவும் எண்ணவோட்டம் கொண்டவர்.

சென்னை வேளச்சேரி பகுதியில் திருமண மண்டபம் வைத்துள்ள சைதை துரைசாமி ஏழை எளிய மக்கள் இலவசமாக தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி அளித்து வருகிறார். அவர்களிடம் 1ரூபாய் கூட வாடகை வாங்குவதில்லை. எம்.ஜி.ஆரின். பக்தர் என்று அழைக்கப்படும் அளவுக்கு அவர் மீது மட்டட்ற்ற மதிப்பு மரியாதை வைத்திருப்பதாலோ என்னவோ அவர் வழிமுறையை அப்படியே பின்பற்றி வருகிறார் சைதை துரைசாமி.

தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இலவச பயிற்சி அளிக்கும் திட்டத்தை, தனது மனித நேய அறக்கட்டளை மூலம் செய்து வருகிறார். அதுமட்டுமல்ல எல்லாவற்றுக்கும் மேலாக தனது பயிற்சி மையத்தில் படிக்கும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு இலவச தங்குமிடம், சாப்பாடு, புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அறக்கட்டளை மூலம் செய்து கொடுக்கிறார் சைதை துரைசாமி.

இதில் குறிப்பிட்ட வேண்டிய விவகாரம் என்னவென்றால், உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல உதவாமால் இறந்தவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், இலவச அமரர் ஊர்தி சேவையையும், இறந்தவர் உடலை பாதுகாக்கும் 10 ப்ரீசர் பாக்ஸ்களை இலவச சேவையாகவும் தனது அறக்கட்டளை மூலம் சைதை துரைசாமி வழங்கி வருவது தான்.

இப்படி சைதை துரைசாமியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம். தனது ஒரே மகன் வெற்றியை மரணம் தழுவிக்கொண்ட சூழலிலும் நிலை குலையாமல் நேற்றைய தினம் அவர் அளித்த பேட்டி முக்கியமானது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களையும் அரசின் உயர் பதவிகளில் அமர வைக்க வேண்டும் என்பதை தனது மகனின் மரணத்தில் உறுதியேற்பதாக சூளுரைத்துள்ளார்.

1984ல் சட்டமன்ற உறுப்பினரானதற்கு பின்னர் 2011-2016 காலக்கட்டத்தில் சைதை துரைசாமி சென்னை மாநகர மேயராக இருந்தார். அதன் பிறகு 2016ஆம் ஆண்டு முதலே தீவிர அரசியலில் இருந்து சைதை துரைசாமி மெல்ல ஒதுங்கிக்கொண்டார். இப்போது முழு நேரமாக தனது அறக்கட்டளை பணிகளை மட்டுமே கவனித்து வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+