Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் ரேஷன் கடைக்கே செல்ல வேண்டாம்! விரைவில் டோர் டெலிவரி! அமைச்சர் முக்கிய அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் பொருட்கள் விரைவில் டோர் டெலிவரி செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக இயங்கி வரும் 48 சூப்பர் மார்க்கெட்டுகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படலாம் என தெரிகிறது.

தமிழகத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. சுமார் 9,900 கடைகள் பகுதி நேரமாகவும் மீதமுள்ள கடைகள் முழு நேர கடைகளாகவும் இயங்கி வருகின்றன.

tamil nadu sakkarapani ration card

வாடிக்கையாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் குறைந்த விலையில் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் அரசு அனுமதித்த பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். பிற பொருட்களை விற்கவே கூடாது. அதை வாங்குமாறு நுகர்வோரை கட்டாயப்படுத்தவும் கூடாது.

ரேஷன் கடைகள் மூலம் வீட்டிற்கே பொருட்களை வழங்குவதில் சிரமம் இருக்கிறது. 2.23 கோடி பேர் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளன. அவர்களது வீடுகளே சென்று பொருட்களை வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் உடல் ரீதியாக சிரமப்படுபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கொண்டு போய் கொடுக்கப்படுகின்றன.

ரேஷன் கடை மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அது போல் பொங்கல் பரிசும் இந்த ரேஷன் கடைகள் மூலமே வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் ரேஷன் பொருட்களை வீடு வீடாக கொண்டு போய் கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மத்திய அரசு ஜிஎஸ்டி விதிக்காவிட்டால் விரைவில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீடு வீடாக டோர் டெலிவரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். டோர் டெலிவரி செய்ய பொருட்களை பாக்கெட்டுகளாக மாற்ற வேண்டும். இதனால் பொருட்கள் வீணாகாமல் மக்களுக்கு சரியான அளவில் கிடைக்கும். இதற்காக 6 மில்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது போன்று டோர் டெலிவரி திட்டம் கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டது. கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த நிலையில் தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு தீவிரம் காட்டியது. அதன் படி ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு செல்லும் நடைமுறைக்காக டோக்கன் வழங்கப்பட்டது. அந்த டோக்கனை வைத்து ரேஷன்பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது.

கொரோனா தொற்று நோய் என அறிவிக்கப்பட்டதால் நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் ரேஷன் பொருட்கள் பாதுகாப்பாக வழங்கப்பட்டது. அந்த டோக்கனில் பொருட்கள் வழங்கப்படும் நாள், நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது. வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருளை வழங்கும் திட்டத்தை முதலில் முழங்கியவர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தான். எனவே ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி செய்யப்பட்டால் அவருடைய கனவு நனவாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+