சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானத்தில் சென்ற 6 பேருக்கு கொரோனா.. பயணிகள் ஷாக்!
சேலம்: சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற விமானத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 56 பேர் சென்ற நிலையில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் சென்னையில் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினமும் 500க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.

இந்த சூழலில் நாடு முழுவதும் கடந்த 25ம் தேதி முதல் பயணிகள் விமான போக்குவரத்து துவங்கி உள்ளது. விமானத்தில் பயணிப்பதற்கு கட்டாயம் இபாஸ் வாங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு வந்தால் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அத்துடன் பயணிகள் அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் இருந்து சேலத்திற்கு நேற்று விமானத்தில் 56 பேர் சென்றனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனயில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் பயணித்த 50 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அண்மையில் சென்னையில் இருந்து கோவை சென்ற விமானத்தில் 24 வயது நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். விமானத்தில் பயணிப்பவர்களிடையே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications