கருணாநிதி நினைவிடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்
சென்னை: பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கலைஞர் நினைவிடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் இட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதை கண்டித்து கடந்த சில நாட்களாகவே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று திடீரென சென்னை அறிவாலயம் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை நடத்தினர்.

அப்போது அறிவாலயத்தை முற்றுகையிட முயன்றதால் அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது ஒரு சிலர் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினர். ஒரு சிலர் வாகனங்களுக்கு அடியில் சென்று படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் மதியம் 2 மணியளவில் வேறு சில பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் கருணாநிதி நினைவிடம் முன்பாக குவிந்தனர். கைகளில் பதாகைகளை ஏந்தியபடி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் இட்டனர். மேலும் உடனடியாக எங்களுக்கு பதில் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். வரும் புத்தாண்டுக்கு முன்னதாக எங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து கருணாநிதி நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கருணாநிதி நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது சில தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications