தூய்மை பணியாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் எங்கே? போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தூய்மை பணியாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்களை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இந்நிலையில், இவர்களை காணவில்லை என நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பணி நிரந்தரம், தூய்மை பணியை தனியாருக்கு விடக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 வாரங்களாக சென்னை ரிப்பன் மாளிகை வெளியே தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் சிலரும் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்திய நிலையில், அவர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications