ஆசை பேராசையானது.. திரும்பிய பக்கமெல்லாம் கேமரா.. விடிய விடிய பார்த்து ரசித்த சஞ்சீவி
Recommended Video

சென்னை: செல்போன்களில் ஆபாச தளங்களை பார்த்த சஞ்சீவிக்கு நேரில் பார்க்க வேண்டும் என பேராசை வந்ததால் விடுதியில் திரும்பிய பக்கமெல்லாம் கேமரா வைத்து அதில் பதிவான காட்சிகளை விடிய விடிய பார்த்து ரசித்துள்ளார்.
சென்னை ஆதம்பாக்கம் தில்லை நகரில் பெண்கள் விடுதியை வைத்து நடத்தி வந்தவர் சஞ்சீவ். இவருக்கு பெண்கள் மீது சபலம் அதிகமாக இருந்திருக்கிறது. இதனால் பெண்கள் விடுதியை நடத்தி வந்துள்ளார்.
ஆரம்பத்தில் தான் சம்பாதித்த பணத்தை பெண்களுடன் உல்லாசமாக இருந்து செலவு செய்துள்ளார். அதில் கடன் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. இதனால் செல்போன்களில் ஆபாச படங்களை பார்த்துள்ளார்.

குளியல் அறை
இதையடுத்து இவற்றையெல்லாம் நேரில் பார்க்க வேண்டுமானால் மகளிர் விடுதியை ஆரம்பித்து அங்கு எல்லா இடங்களிலும் கேமராவை வைக்குமாறு அறிவுரை கூறியுள்ளனர். இது நல்ல ஆலோசனை என கருதிய சஞ்சீவி, முதலில் குளியல் அறை, பாத்ரூம் ஆகிய இடங்களில் வைத்துள்ளார்.

வினை
பின்னர் பெண்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடக் கூடும் என்பதால் படுக்கை அறையிலும் ஒரு இடம் விடாது சுற்றி சுற்றி 16 கேமராக்களை வைத்திருந்தார். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதற்கேற்ப பிளக் பாயின்டில் வைத்த கேமரா பெண்களிடம் காட்டி கொடுத்துவிட்டது.

பகீர் தகவல்கள்
இவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் கூறுகையில் , விடுதியில் தங்கியுள்ள பெண்கள் காலையில் போனால் மாலைதான் வருவர். இந்த நேரத்தில் விடுதியில் உள்ள எனது அறைக்கு சென்று கேமராவில் பதிவானத்தை பார்ப்பேன். பின்னர் அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்வேன்.

விடிய விடிய
அங்கேயே அமர்ந்து கொண்டு இரவு வரை பார்ப்பேன். பின்னர் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு வீட்டுக்கு வந்து விடுவேன். மனைவி, குழந்தைகள் தூங்கியவுடன் பெண்கள் குளியல் அறைகளில் குளிப்பதையும் படுக்கை அறைகளில் உடை மாற்றுவதையும் விடிய விடிய பார்த்து ரசிப்பேன் என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications