சரவணபவன் ராஜகோபால்.. புழல் சிறையில் அடைப்பு.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!
Recommended Video
சென்னை: ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சரணடைந்தார் ராஜகோபால். இதற்காக அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தனது ஹோட்டலில் பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதியின் மீது ஆசைப்பட்ட சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால். கடந்த 2001-ஆம் ஆண்டு ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அப்போது உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையும் எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். அப்போது ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

மனுதாக்கல்
இந்த நிலையில் ராஜகோபால் கடந்த 7-ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ராஜகோபாலோ தனக்கு நரம்பு தளர்ச்சி நோய் உள்ளதாக கூறி சரணடைவதிலிருந்து விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கேள்வி
இதனிடையே அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று ராஜகோபால் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் ஏன் ஒரு நாள் கூட சிறையில் இருக்க முடியாதோ என கேள்வி எழுப்பியது.

ஆம்புலன்ஸ் வாகனம்
மேலும் சரணடைவதிலிருந்து விலக்கு கேட்டு அவர் தொடர்ந்த மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அவர் உடனடியாக சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் வெளியே வந்தார்.

பரபரப்பு
அப்போது அவரை புகைப்படம் எடுக்க பத்திரிகையாளர்கள் சூழ்ந்தனர். இதையடுத்து அங்கிருந்த காவலாளிகளும் மருத்துவமனை ஊழியர்களும் கேமராவை உடைப்போம் என மிரட்டினர். பின்னர் படம் எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் நீதிமன்றத்துக்கு வந்த ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications