திடீர் இட்லி போல் திடீர் கட்சி.. சசிகலாவுக்கு 0.1% வாக்கு கூட கிடையாது.. சாடிய டிடிவி தினகரன்!
சென்னை: திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல் உருவாகும் புதிய கட்சிகளால் எங்கள் கூட்டணிக்கு பாதிப்பும் இல்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு 0.1% வாக்குகள் கூட இல்லை என்று கூறிய டிடிவி தினகரன், காக்கா குருவிகள் போல் நெல்மணிகளை சிலர் கொத்தி செல்வதால், எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விமர்சித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சசிகலா தரப்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சசிகலா பேசுகையில், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் புதிய கட்சியை தொடங்குகிறேன். 9 ஆண்டுகளாக அமைதியாக இருந்தது போல் இனி இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதன்பின் புதியக் கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்தார். அந்த கொடி கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொடிக்கு நடுவே அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து சசிகலாவின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், சசிகலா தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கனவே ஓபிஎஸ் தனித்துவிடப்பட்டுள்ள நிலையில், சசிகலாவின் நகர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சசிகலாவின் புதிய கட்சி தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டிடிவி தினகரன் பேசுகையில், அதிமுக - அமமுக கூட்டணி மூலமாக ஜெயலலிதாவின் 99.1 சதவிகித தொண்டர்கள் ஒன்றிணைந்துவிட்டனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். திடீர் சாம்பார், திடீர் இட்லி போல் கட்சிகள் வரலாம். ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று சொன்னவர்களின் சாயம் இப்போது வெளுத்துவிட்டது.
கடந்த 35 ஆண்டு காலமாக எனக்கு மட்டுமே தெரிந்த நபர்களின் உண்மை நிலை, இன்று தமிழக மக்களுக்கும் நன்றாக தெரிய வந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் ஆட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது. நெல்மணிகள் நிறைந்த தோட்டத்தில் சிலவற்றை சிட்டுக்குருவிகளும், காக்கைகளும் கொத்தி செல்வதால் பாதிப்பு ஏற்பட்டுவிடுமா என்ன? சசிகலாவுக்கு 0.1% வாக்குகள் கூட கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
-
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications