சசிகலா பேச்ச கவனிச்சீங்களா.. அப்போ கன்ஃபார்ம்! டெல்லி பக்கம் வீசும் மன்னார்குடி காத்து..
சென்னை: பாஜக உதவியுடன் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை கைப்பற்ற செய்திகள் வெளியாகி வரும் நிலையில் நேற்று சசிகலா அளித்த பேட்டி இதை உறுதிபடுத்தி இருக்கிறது.
Recommended Video
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ளது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டபோதிலும், ஓ.பன்னீர்செல்வம் மனம் தளராமல் வழக்குகள், அரசியல் நகர்வுகளை எடுத்து வருகிறார்.

ஓபிஎஸ் நம்பிக்கை
இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் பொதுக்குழு வழக்கை ஓ.பன்னீர்செல்வம் நம்பி இருக்கிறார். அதேபோல். ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமானதில் இருந்தே டெல்லியையும் மன்னார்குடியையும் மலைபோல் நம்பி தனது ஆதரவாளர்களுக்கு ஊக்கம் கொடுத்து வந்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

டிடிவி தினகரன்
இந்த நிலையில்தான் தனியார் ஆங்கில இதழுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "திமுகவை வீழ்த்துவதற்காக யாரோடும் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறோம். அது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியாக இருந்தாலும் சரி. டெல்லியிலிருந்து சில நல விரும்பிகள் சசிகலா, இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எங்களிடம் பேசினார்கள்.

எடப்பாடி வேண்டாம்
நான் எடப்பாடி பழனிசாமியை சேர்த்துக்கொள்ள மாட்டேன். என்ற நிபந்தனையை முன்வைத்தேன். ஓ.பன்னீர்செல்வத்துடன் நாங்கள் இணைய வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் இணைய மாட்டேன். நடராசன் மரணமடைந்தபோது பரோலில் வந்த சசிகலாவுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது எடப்பாடி பழனிசாமி அரசுதான்." என்றார்.

சசிகலா பேட்டி
டிடிவி தினகரன் பேச்சு இவ்வாறு இருக்க சசிகலாவின் திட்டமும் இதுதான் என்பது அவரது பேச்சின் மூலமாக அறிய முடிகிறது. சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, "40 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். அதிமுக ஒன்றாகவிடாமல் சிலர் தடுக்கிறார்கள். அதிமுக பிரிந்தால் லாபம் திமுகவுக்கே. எனவே இதன் பின்னணியில் திமுகதான் இருக்கிறது. இதற்கு டெல்லி காரணம் இல்லை." என்றார்.












Click it and Unblock the Notifications