வருகிறார் சசிகலா.. மாவட்டந்தோறும் தடபுடல் வரவேற்பு.. ஆட்டம் பாட்டத்துடன் காத்திருக்கும் அமமுக!
சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலா இன்று சென்னைக்கு வருகை தர உள்ளார்.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் நுழைவு பகுதியிலும் சசிகலாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க அமமுகவினர் முடிவு செய்துள்ளனர்.
சசிகலா வரும் வழியெங்கும் பட்டாசுகள் வெடித்தும், ஆட்டம்-பாட்டத்துடன் வரலாறு காணாத வரவேற்பு கொடுத்து சென்னைக்கு அழைத்து வர அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தயாராக உள்ளனர்.

சசிகலா விடுதலை
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து ஜனவரி 27ஆம் தேதி விடுதலையானார். விடுதலை நெருங்கிய நேரத்தில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தமிழகம் வருகிறார்
பின்னர் தீவிர சிகிச்சையால் குணமடைந்த அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்பு சசிகலா மருத்துவர்களின் அறிவுரைப்படி பெங்களூரு அருகே உள்ள பண்ணை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலையில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தமிழகத்தில் காலடி எடுத்து வைக்க உள்ளார்.

பிரமாண்ட வரேவேற்பு
சசிகலா பெங்களுருவில் இருந்து கார் மூலம் சென்னை வருகிறார். சசிகலா பெங்களூரு-சென்னை ரெயில் வழித்தடம் வழியாக சென்னைக்கு வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் நுழைவு பகுதியிலும் சசிகலாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க அமமுகவினர் முடிவு செய்துள்ளனர்.

பட்டாசுகள், போஸ்டர்கள்
சசிகலா வரும் வழியெங்கும் பட்டாசுகள் வெடித்தும், ஆட்டம்-பாட்டத்துடன் வரலாறு காணாத வரவேற்பு கொடுத்து சென்னைக்கு அழைத்து வர அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தயாராக உள்ளனர். சசிகலா வழியெங்கும் வரவேற்பு தோரணங்கள், போஸ்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தின் எல்லையில் இருந்து சென்னை வரை ஒவ்வொரு இடத்திலும் ஆரத்தி எடுத்து தடபுடல் வரவேற்பு அளிக்க இப்போது இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர் அமமுக தொண்டர்கள்.












Click it and Unblock the Notifications