பிப் 8-இல் தமிழகம் அதிரும்ல எடுத்த சபதம் முடிப்பேன்.. முதல்வர், துணை முதல்வர் வீடு அருகே போஸ்டர்கள்!
சென்னை: முதல்வர், துணை முதல்வர் குடியிருப்பு பகுதிகளில் சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலையானார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற அவர் தற்போது தொற்று நீங்கினாலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சசிகலா விடுதலையான நாளான 27-ஆம் தேதி முதல் அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அதை ஒட்டும் நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள்.

சசிகலா
அவர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். இருந்தபோதிலும் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் முதல்வர், துணை முதல்வர் குடியிருப்பு பகுதிகளில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ராஜமாதாவே வருக
அதில் உம் சொல்லே இங்கு சாசனம், எங்கள் ராஜமாதாவே வருக வருக என்றும் பிப்ரவரி 7-இல் தமிழகம் அதிரும்ல!, எடுத்த சபதம் முடிப்பேன்... இரட்டை இலையும் நமதே, நாளையும் நமதே என மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

செங்கோல்
அந்த போஸ்டர்களில் செங்கோலை ஜெயலலிதா சசிகலாவுக்கு கொடுப்பது போன்ற படங்கள் இருந்தன. அது போல் ஜெயலலிதா சமாதியில் சசிகலா ஓங்கி அடித்து சபதம் செய்வது போன்ற படமும் சசிகலா மைக்கில் பேசுவது போன்ற படமும் இருந்தன.

அதிமுக கொடி
நாளை மறுநாள் சென்னைக்கு வரும் போது பல்வேறு இடங்களில் அவரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அவரது காரில் பெங்களூரில் அதிமுக கொடி கட்டியிருந்தது போல் சென்னைக்கு வரும் போது அதிமுக கொடி கட்டியிருக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications