Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛இவிஎம்’ அறையில் பழுதாகும் சிசிடிவி.. தேர்தல் அதிகாரிகளுக்கு சத்யபிரதா சாகு போட்ட உத்தரவு.. அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் அடிக்கடி சிசிடிவி கேமராக்கள் பழுதாகி வருகின்றன. இதுதொடர்பாக இன்று மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர். அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது.

Sathya pratha Sahu orders to install additional cameras in the rooms where the voting machines are kept in Tamil Nadu

தமிழகத்தின் 39 தொகுதிகளில் மொத்தம் 69.72 சதவீத ஓட்டுகள் பதிவானது. தேர்தல் முடிவடைந்த பிறகு ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு ஸ்ட்ராங் அறையில் வைக்கப்பட்டன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 அடுக்குகளாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சிசிடிவி கேமராவில் பதிவாகும் காட்சிகளை திரையில் நேரடியாக ஒளிபரப்பபப்படுகின்றன. அதனை வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் ஏஜென்ட்டுகள் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் தமிழகத்தில் தொடர்ந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி பழுதாகி வருகின்றன. ஈரோடு, தென்காசி, மதுரை, வடசென்னை உள்பட இன்னும் சில ஓட்டு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுதான நிலையில் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டன. ஆனாலும் கூட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் தொடர்ந்து பழுதாவதால் பொதுமக்களும் குழப்பம் அடைந்தனர்.

இதற்கிடையே தான் மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உடனடியாக ஆலோசனை கூட்டம் காணொலி மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுது மற்றும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கான பயிற்சி என்பது மே 20ம் தேதி முதல் நடத்தப்பட வேண்டும் என அவர் அறிவுரை வழங்கினார்.

அதுமட்டுமின்றி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். மேலும் கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை ஏஜென்ட்டுகள் பார்க்கும் வகையில் கூடுதல் டிஸ்பிளேக்கள் பொருத்த வேண்டும். சிசிடிவி கேமராக்கள் பழுதாகாத வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+