Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அவமரியாதை.." ஆவேசமான ஈவிகேஎஸ் இளங்கோவன்.. பரபரத்த சத்தியமூர்த்தி பவன்

சத்தியமூர்த்தி பவனில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மேடையில் இடம் ஒதுக்காமல் அவமானப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சத்தியமூர்த்தி பவன் என்றாலே சண்டையும் சச்சரவும்தான். அவ்வப்போது சண்டை சச்சரவு ஏற்படுவது வாடிக்கையான நிகழ்வாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன் மாநில தலைவர் அழகிரி முன்னிலையிலேயே அடிதடி சண்டை நடைபெற்றது. இன்று ராகுல்காந்தி வரும் போதும் சண்டையும் ஆவேச பேச்சுக்களும் அரங்கேறின.

Recommended Video

    அவமரியாதை.. ஆவேசமான ஈவிகேஎஸ் இளங்கோவன்.. பரபரத்த சத்தியமூர்த்தி பவன்

    சண்டைக்கு காரணம் மேடையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இடம் ஒதுக்காமல் விட்டதுதான் என்ற குற்றச்சாட்டை அவரது ஆதரவாளர்கள் முன்வைத்தனர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு மேடையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ராகுல்காந்தி சத்தியமூர்த்தி பவனுக்கு முன்பாக களேபரமும் சண்டையும் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    Sathyamoorthy Bhavan clash KS Alagiri supporters vs EVKS Ilangovan supporters

    டெல்லியில் இருந்து சென்னை வந்த ராகுல்காந்தி, நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் நடைபெற்ற உங்களில் ஒருவன் நூல் வெளியிட்டு விழாவில் பங்கேற்று பேசினார். நகைச்சுவையாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பேசிய ராகுல்காந்தி இறுதியில் மோடியைத் தாக்கி ஆவேசமாக பேசினார்.

    விழா நிறைவடைந்த பின்னர் சற்று நேர ஓய்வுக்குப் பிறகு சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார். அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சத்திய மூர்த்தி பவனில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு முழுவதும் இருந்தும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களுக்கு ராகுல் காந்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    சத்திய மூர்த்தி பவனில் ராகுல்காந்தி வருவதற்கு முன்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும் தற்போதைய தலைவர் கேஎஸ் அழகிரி ஆதரவாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்றது. ராகுல்காந்தி பேசும் மேடையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இடம் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனையடுத்து வாக்குவாதம் ஏற்படவே, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நாற்காலி போடப்பட்டது. பின்னர் ஆதரவாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், அனைவரையும் சமாதானப்படுத்தினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+