Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அரசியலுக்கு வரும் பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் சத்தியவாணி முத்து" -முதல்வர் ஸ்டாலின் பேச்சு

போராட்ட குணமும், தியாக உணர்வும் கொண்டவராக இறுதி மூச்சு வரை இருந்த காரணத்தினால் சத்தியவாணி முத்து இன்றைக்கும் போற்றப்படுகிறார் என முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு தியாகங்களை செய்தவர் சத்தியவாணி முத்து, போராளியாக வாழ்ந்தவர். போராட்ட குணமும், தியாக உணர்வும், அசைக்க முடியாத கொள்கை பற்றும் கொண்டவராக இறுதி மூச்சு வரை இருந்த காரணத்தினால் சத்தியவாணி முத்து இன்றைக்கும் போற்றப்படுகிறார் என முன்னாள் அமைச்சர் சத்தியவாணி முத்துவின் நூற்றாண்டு விழாவில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.

முன்னாள் அமைச்சர் சத்தியவாணி முத்துவின் நூற்றாண்டு விழாவில், சத்தியவாணி முத்து, அரசியலுக்கு வரும் பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார் என்றும் போராட்ட குணமும், தியாக உணர்வும், அசைக்க முடியாத கொள்கை பற்றும் கொண்டவராக இருந்ததால் இறுதி மூச்சு வரை இன்றைக்கும் போற்றப்படுகிறார் என தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.

சத்தியவாணி முத்துவின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு. க ஸ்டாலின் பேசியதாவது:-

கலைஞரின் அமைச்சரவையில்

கலைஞரின் அமைச்சரவையில்

அண்ணாவின் அமைச்சரவையில் அமைச்சராக, கலைஞரின் அமைச்சரவையில் அமைச்சராக தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகத்தின் தலைவராக நாடாளுமன்ற அமைச்சராக ஒன்றிய அமைச்சராக திமுகவின் ஆதிதிராவிட நலப்பிரிவு செயலாளராக, 1991 ஆம் ஆண்டு அகில இந்திய எஸ்.சி.எஸ்.டி ஆணையத்தின் தலைவராக சத்தியவாணி நியமிக்க வேண்டும் என்ற கலைஞரின் கோரிக்கையை பிரதமர் விபி சிங் ஏற்றுக்கொண்டார். ஆனால் அப்போது அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. அதனால், சத்தியவாணி முத்து அந்த பொறுப்புக்கு அப்போது செல்ல முடியாமல் போயிவிட்டது.

ஊர்வலத்தை கலைக்க பார்த்தார்கள்

ஊர்வலத்தை கலைக்க பார்த்தார்கள்

அதை மனதில் வைத்திருந்த கலைஞர் 1991- ஆம் ஆண்டு தந்தை பெரியார் விருதை சத்தியவாணி முத்துவிற்கு வழங்கி பெருமைப்படுத்தினார் என்பது வரலாறு. அப்போதுதான் முதன் முதலாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்திருந்தார். முப்பெரும் விழாவைக்கூட சென்னையில் நடத்த விடக்கூடாது என்று கலவரத்தை ஏற்படுத்தினார்கள். மிகப்பெரிய ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கல்லெறிந்து ஊர்வலத்தை கலைக்க பார்த்தார்கள்.

இறுதி மூச்சு வரை

இறுதி மூச்சு வரை

அப்பொழுதும் தைரியமாக துணிந்து வந்தார். மூன்று நான்கு தெருக்கள் கடந்து எப்படியோ மேடைக்கு வந்துவிட்டார். தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் குறித்து எழுச்சியுரை ஆற்றினார். அந்த நாளை எண்ணிப்பார்க்கிறேன். போராட்ட குணமும் தியாக உணர்வும், அசைக்க முடியாத கொள்கை பற்றும் கொண்டவராக இறுதி மூச்சு வரை இருந்த காரணத்தினால் சத்தியவாணி முத்து இன்றைக்கும் போற்றப்படுகிறார்.

போராளியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்

போராளியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்

இதனை இக்கால மகளிர் அணியினரும் உணரவேண்டும் என்றுதான் இந்த நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது. இத்தனை பதவிகளில் இருந்தார் என்றால் அத்தகைய தியாகங்களை செய்து இருக்கிறார் என்ற அந்த காரணம் தான். இத்தனை ஆண்டு காலத்திற்கு பிறகும் போற்றப்படுகிறார் என்றால் அந்த அளவிற்கு ஒரு போராளியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் என்பதற்காகத்தான். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+