ரூ.2000 ஆயிரம் வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பு.. ஹைகோர்ட் கதவை தட்டிய சட்ட பஞ்சாயத்து இயக்கம்
சென்னை:ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 வழங்கும் திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டசபை கூட்டத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், வறுமை கோட்டிற்கு கீழுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என்று கூறினார்.

இந்நிலையில், வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு சட்டப் பஞ்சாயத்து இயக்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அந்த இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் வகையில் திட்டம் இருப்பதாக மனுவில் செந்தில் குமார் குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே 2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்க தடை கோரிய முறையீடு, வழக்காக தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications