அனைத்து முயற்சிகளும் நடக்கிறது.. சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும்.. மு.க ஸ்டாலின் பேட்டி!
ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சிறுவன் சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சிறுவன் சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
தமிழகம் தற்போது சிறுவன் சுஜித்தை நலமுடன் மீட்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை, சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார்.
கடந்த 75 மணி நேரமாக சுஜித்தை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் சிறுவன் சுஜித் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில், சுஜித் நலமுடன் திரும்ப வேண்டும் என்று அனைவரையும்போல நானும் எதிர்பார்க்கிறேன். குழந்தையை விரைவில் மீட்க வேண்டும்.
மூச்சு திணறி.. பசி தாகம் ஏற்பட்டு.. தவித்து.. சுஜித்தை நினைக்கும்போது நெஞ்சு வெடிக்கிறது..வைகோ வேதனை
குழந்தையை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருவதை பார்க்கிறேன். இது பற்றி மேலும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை.
தமிழக மருத்துவர்கள் போராட்டத்திலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். மருத்துவர்கள் உடலை வருத்திக்கொண்டு போராட வேண்டாம். அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும், என்று ஸ்டாலின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.