-10000 +2000.. சின்னதா ஒரு ஸ்மார்ட் ஐடியா.. குழந்தைகள் கல்வி செலவுக்கு வங்கிகளே அள்ளி தருவாங்க!
சென்னை: குழந்தைகளின் கல்வி செலவுக்கு சேமிக்காமல் விட்டதால், நகைகளை அடகு வைக்கலமா அல்லது பர்சனல் லோன் போடலாமா அல்லது கடன் வாங்கலமா என்று யோசிக்கிறீர்களா.. இப்படி செய்தால் வங்கிகளுக்கு நீங்கள் பணம் வட்டியாக பெருந்தொகை கட்ட வேண்டியிருக்கும், மாறாக அடுத்த ஆண்டு இதை பின்பற்றி பாருங்கள், நிச்சயமாக வங்கிகள் உங்களுக்கு வட்டி தரும்.
யார் ஸ்மார்ட்டாக யோசிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் ஆகிறார்கள். உங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வி தர வேண்டும் ஆசைப்படுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் நீங்கள் அதற்காக அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் தான் நல்ல பள்ளிகள் என்று நினைத்து விட வேண்டும்.

அரசு பள்ளிகளுக்கும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. எனக்கு தெரிந்து காரைக்குடியில் உள்ள அரசு பள்ளியில் சேருவது மிக கடினம். அந்த அளவிற்கு அங்கு வசதிகள் அதிகம். மக்கள் போட்டி போடுவார்கள். சென்னை பல்லாவரத்திலும் உள்ள ஒரு அரசு பள்ளியில் சேருவதற்கு மக்கள் முட்டி மோதுவார்கள். எனக்கு தெரிந்தது இந்த இரண்டு மட்டுமே.. உங்களுக்கு இன்னமும் நிறைய தெரிந்திருக்கும். உங்கள் பொருளாதார வசதிகளுக்கு ஏற்ப பள்ளிகளை முடிவு செய்யுங்கள். பணக்காரர்கள் படிக்கும பள்ளியில் படித்தால் தான் குழந்தைகள் சிறப்பாக வளருவார்கள் என்ற நம்பிக்கை வேண்டாம். எங்கு படித்தாலும் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியை உங்களால் கொடுக்க முடியும்.
சரி விஷயத்திற்கு வருவோம்.. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் தொடங்கும் புதிய கல்வியாண்டில் மாணவர்களுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உணர்வு பல பெற்றோர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. பள்ளி கட்டணம் மட்டுமின்றி, பள்ளிக் கட்டணம் மட்டுமில்லாமல், புத்தகம், சீருடை, இதர கல்வித் தேவைகள் என்று ஒவ்வொரு வருடமும் குழந்தைகளின் கல்விக்கான செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

கடன் வாங்கி சமாளித்துவிடலாம், நகைகளை அடகு வைத்து பள்ளிக் கட்டணம் கட்டி விடலாம் என்று நினைக்காதீர்கள். இதனால் வங்கிகளில் வட்டி கட்டி, நகைகளை திருப்ப முடியாமல் அவதிப்படும் சூழலும் எதிர்கொள்ளும் நிலை வரலாம். இந்த சிரமங்களை களைய, 'சரியான திட்டமிடுதல்' அவசியம். இதன் மூலம் சிரமம் இல்லாமல் கல்வி கட்டணத்தை செலுத்தலாம்.
ஒரு பள்ளியில் உங்கள் குழந்தையை சேர்ப்பதற்கு முன்பு, அதன் கட்டணங்கள் உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றதா? என்பதை யோசியுங்கள், ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்குச் செலுத்த வேண்டிய மொத்தக் கட்டணம் எவ்வளவு என்று பாருங்கள். உதாரணமாக உங்கள் குழந்தைக்கான ஓராண்டு கல்விக் கட்டணம் ரூபாய் 50 ஆயிரம் என வைத்துக் கொள்ளுங்கள். அதை 10 மாதங்களுக்கு கணக்கிட்டால் மாதம் ரூ.5,000 ஆகும். நீங்கள் இரண்டு குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் இந்த தொகை மாதம் ரூபாய் 10 ஆயிரமாக உயரும். உங்களுடைய மாத சம்பளத்தில் குடும்பச் செலவுகள் போக, குழந்தைகளின் கல்விக்கு இந்தத் தொகையை உங்களால் ஒதுக்க முடியும் என்றால் சிந்தியுங்கள்.
ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ஒதுக்கி வைத்தால், வருடத்தின் முடிவில், 60 ஆயிரம் ஆக இருக்கும். அதில் பள்ளிக் கட்டணமாக ரூபாய் 50 ஆயிரம் கட்டினால் மீதம் இருக்கும் தொகையை சீருடை, போக்குவரத்து, சுற்றுலா போன்ற இதர கட்டணங்களுக்குச் செலவு செய்ய முடியும்
இதற்கு வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் கணக்கு ஒன்று தொடங்கலாம். மாதந்தோறும் உங்கள் சம்பளப் பணம் வந்ததும் இந்த ஆர்.டி. கணக்கில் தானாகவே வரவு வைக்கும்படி செய்து விடுங்கள், ஒரு வருடம் முடியும்போது அதை அப்படியே பள்ளியில் கட்டி விடலாம். பின்னர் உடனடியாக அடுத்த ஆர்.டி. தொடங்கி அடுத்த கல்வியாண்டுக்காக சேமிக்கத் தொடங்கலாம். எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, ஐசிசிஐ உள்பட பல்வேறு வங்கிகள் இதற்கு கணிசமாக வட்டியும் தருகின்றன.

உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியில் மாதம் ஐந்தாயிரத்தை வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கி டெபாசிட் செய்தால், 2024 ம் ஆண்டு ஜூன் மாதத்தின் போது உங்கள் கையில் 62,378 ரூபாய் இருக்கும். அதாவது வட்டியாக மட்டும் 2,378 ரூபாய் கிடைக்கும். ஹெச்டிஎப்சி வங்கியில் என்றால் 62179 ரூபாய் உங்கள் கையில் இருக்கும். அதாவது வட்டியாக மட்டும் 2179 ரூபாய் வங்கிகள் உங்களுக்கு தரும். வயதானவர்கள் பெயரில் தொடங்கினால் இன்னும் கொஞ்சம் கூடுதலான வட்டி தொகையும் கிடைக்கும்.
ஸ்மார்ட்டாக யோசித்தால் வங்கிகள் உங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2100 ரூபாய் வட்டியாக தருவார்கள், அத்துடன் சிக்கலும் இருக்காது. மாறாக சேமிக்கமால் நீங்கள் 50 ஆயிரம் பர்சனல் லோன் வாங்கினால் வங்கிகளுக்கு நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் வரை வட்டி மற்றும் பிராசசிங் பீஸ் ஆக தர வேண்டியதிருக்கும். எந்த வங்கியும் மிககுறைந்த கடனமாக இருந்தாலும், 18 மாதங்களாவது இஎம்ஐ போட்டால் தான் தருகின்றன. அப்படி செய்தால் தான் கடன் தருவர்கள். நிதிநிறுவனங்களில் இன்னமும் கூடவே வட்டி இருக்கும். எனவே ஸ்மார்ட்டாக யோசியுங்கள். அப்போதுதான் கடனில் விழாமல் தப்பிக்க முடியும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications