எப்போ வேண்டுமானாலும் என்னை தூக்கிருவாங்க! மிட்நைட்டில் வீடியோ வெளியிட்ட சவுக்கு சங்கர்! என்னாச்சு?
சென்னை: பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் விமர்சனம் என்ற பெயரில் தவறான கருத்துகளை பரப்பி வருகிறார், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தனை இழிவுபடுத்தி பேசியுள்ளார் எனவே சவுக்கு சங்கர் மீதும், அவரது உதவியாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுஜன் சமாஜ் கட்சியினர் புகார் அளித்திருந்த நிலையில், போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தன்னையும் தனது குழுவினரையும் எப்போது வேண்டுமானாலும் போலீசார் கைது செய்யலாம் என சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
சவுக்கு சங்கர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் கோவை அழைத்து சென்றனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து அவர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. இதனையடுத்து சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி சவுக்கு சங்கர் தன்னை 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் பணம் தர மறுத்ததால் தன்னை தாக்கியதாக சினிமா தயாரிப்பாளரான மகேஷ் ரம்யா என்பவர் புகார் அளித்தார்.
புகார் தொடர்பாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி ஜாமினில் வெளிய வந்தார். இதற்கிடையே சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பழனி தலைமையிலான கட்சியினர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதில்," கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியலமைப்பு சட்டம் தந்த கருத்து சுதந்திரத்தை சவுக்கு சங்கர் தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதித்து வருவதாகவும், விமர்சனம் என்ற பெயரில் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாகவும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆனந்தனை இழிவுபடுத்தி பேசி வரும் நிலையில் சவுக்கு சங்கர் மீதும் அவரது உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்திருந்தனர்.
புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பகுஜன் சமாஜ் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர், மாலதி மற்றும் அவரது குழுவினர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என சவுக்கு சங்கர் கூறியிருக்கிறார்.
" நீதிமன்றங்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தான் ஜாமினில் வெளி வரக் கூடாது என்பதற்காகவே இரவு அல்லது அதிகாலையிலையோ தான் கைது செய்யப்படலாம் எனவும், இந்த கைது நடவடிக்கை ஜாமீன் கிடைக்கக் கூடாது என்பதற்காக எடுக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.
மேலும் தங்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும், அலுவலகம் சீல் வைக்கப்பட இருப்பதாகவும் கூறிய சவுக்கு சங்கர், தேர்தலுக்கு முன் சவுக்கு மீடியாவை முழுமையாக அடக்க அரசு முயற்சிப்பதாகவும், அடுத்து 45 நாட்களுக்கு எவ்வளவு அடக்குமுறைகளை ஏவ முடியுமோ அவ்வளவுவற்றையும் தமிழ்நாடு அரசு செய்து வருவதாகவும், இதற்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் எனக் கூறியிருக்கிறார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications