ஏடிஎம்-ல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க புது அறிவிப்பு.. எஸ்பிஐ அதிரடி.. என்னன்னு பாருங்க
ஏடிஎம்மில் பணம் கொள்ளை போகாமல் இருக்க புது திட்டம் ஒன்றை எஸ்பிஐ கொண்டு வந்துள்ளது.
சென்னை: ஏடிஎம்மில் பணம் திருட்டு போவதை தவிர்ப்பதற்காகவே ஒரு புது திட்டத்தை எஸ்பிஐ வங்கி கொண்டு வந்துள்ளது..
கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏடிஎம்களில் இருந்து கொள்ளை புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.. இதுகுறித்து போலீசாரும், கொள்ளையடிக்க எந்த கார்டு உபயோகிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு விசாரித்து வருகிறார்கள்.
எஸ்பிஐ ஏடிஎம்மின் டெபாசிட் இயந்திரத்தை மட்டுமே குறிவைத்து அந்த குறிப்பிட்ட கொள்ளை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன..

இதைதவிர, நம்மிடம் ஏடிஎம் கார்டு தொலைந்து விடும்போதெல்லாம், ஏடிஎம்மில் பணம் திருடு போவதும் இயல்பாக நடக்கிறது.. ஏடிஎம் கார்டை எங்காவது மறந்து வைத்துவிட்டோமா என்று தேடி கண்டுபிடிப்பதற்குள், பணத்தை எடுத்து விடுகின்றனர்.. இதற்கு பிறகு புகார் அளித்து, கார்டை செயலிழக்க செய்கிறோம் என்றாலும், இது காலதாமதமான செயலாக உள்ளது.
இதை தடுத்து, வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்க எஸ்பிஐ வங்கியானது, கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஏடிஎம்மில் "ஓடிபி" திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.. அதன்படி, இரவு 8 மணி வரை காலை 8 மணி வரை, 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும்போது ஓடிபி வசதியை பயன்படுத்தி தான் பணம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது.
இது ஓரளவு நல்ல பலனையும் வாடிக்கையாளர்களுக்கு பெற்று தந்தது.. எனவே, இந்த கால நேரத்தைதான் தற்போது நீட்டித்து, 24 மணி நேரமும் இந்த வசதியை எஸ்பிஐ மாற்றம் கொண்டு வந்துள்ளது... இந்த திட்டத்தின் மூலம், பணம் திருட்டு முற்றிலும் தடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.
அதாவது, எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்கள், கார்டை செலுத்தியதுமே வழக்கம்போல் அவர்களது பின்நம்பரை பதிவிட வேண்டும்... பிறகு, எவ்வளவு பணம் எடுக்க போகிறோம் என்பதை குறிப்பிட வேண்டும்.. அப்போது, சம்பந்தப்பட்டவரின் செல்போனுக்கு ஒரு ஓடிபி வரும்... அந்த ஓடிபி நம்பரை ஏடிஎம் திரையில் சரியாக பதிவிட்டால் மட்டுமே நம்மால் பணத்தை எடுக்க முடியும்...
இதன்மூலம் மோசடிகளை மேலும் தவிர்க்க முடியும் என்று எஸ்பிஐ வங்கி தரப்பு சொல்கிறது. நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கிக்கு 22 ஆயிரத்து 224 கிளைகள் உள்ளன. சுமார் 63 ஆயிரம் ஏடிஎம்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications