அமலுக்கு வந்த எஸ்பிஐ வங்கியின் புதிய கட்டண நடைமுறை! குறைந்தபட்ச இருப்பு, பணம் எடுக்கும் அளவு மாற்றம்
Recommended Video
சென்னை: அக்டோபர் 1ம் தேதியான இன்று முதல், பாரத ஸ்டேட் வங்கி, ஏடிஎம்களில் பணம் எடுப்பது உள்ளிட்ட பிற சேவைகளுக்கான கட்டண விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எஸ்பிஐ. இதன் புதிய விதிமுறைகள் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. மெட்ரோ சிட்டிகள், சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற கிளைகளுக்கு ஏற்ப இந்த விதிமுறைகள் மாறுபடும்.

ஒரு மாதத்திற்கு, இலவசமாக ஏடிஎம்களில் பணம் எடுக்கும் அளவு 2 முதல் 15 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில், வாடிக்கையாளர்கள், சராசரி குறைந்தபட்ச இருப்புத் தொகை (AMB) என்பது 5000த்திலிருந்து, ரூ.3000 என குறைக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை இதைவிட 50 விழுக்காட்டுக்கும் குறைவாக, பணம் இருப்பு வைக்கப்பட்டால், ரூ.10 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். 50 முதல் 75 அளவுக்கு குறைவாக இருந்தால் ரூ.12 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். 75 சதவீதத்திற்கும், குறைவாக இருப்புத் தொகை இருந்தால், 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரித்தொகை வசூலிக்கப்படும்.
சிறு நகரங்களில் உள்ள எஸ்பிஐ வங்கிகளின் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்ச சராசரி தொகையாக ரூ.2000 இருப்பு வைத்திருக்க வேண்டும். கிராமப்புற வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.1000 வைத்திருக்க வேண்டும்.
RTGS மற்றும் NEFT வாயிலாக மேற்கொள்ளப்படும் ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது. ஆனால், வங்கி கிளைகள் வாயிலாக இவற்றை மேற்கொண்டால் கட்டணம் வசூலிக்கப்படும்.
சராசரி மாத இருப்பை ரூ.25,000 வரை பராமரிக்கும் வாடிக்கையாளர், வங்கி கிளைகளில் இரண்டு முறை இலவசமாக பணம் எடுக்கலாம், சராசரி மாத இருப்பு 25,000 மற்றும் 50,000 வரை இருந்தால், அந்த வாடிக்கையாளர், 10 முறை இலவசமாக பணம் எடுக்கலாம்.
ரூ.50,000க்கு மேல் ரூ.1,00,000 வரை சராசரி டெபாசிட் இருந்தால், 15 முறை வங்கி கிளைகளில் இலவசமாக பணம் எடுக்க முடியும். சராசரி மாத இருப்பு ரூ.1,00,000 க்கு மேல் இருந்தால், கணக்கு வைத்திருப்பவர் எத்தனை முறை வேண்டுமானாலும், கட்டணமின்றி, பணம் எடுக்க முடியும்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications