நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் திருப்பம்-உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்க வாய்ப்பு?
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் புதிய திருப்பமாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு காலஅவகாசம் வழங்குவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என வழக்கு தொடர்ந்த சங்கர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதால் கூடுதல் அவகாசம் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டு நடைமுறைகள் தொடர்ந்து வருகின்றன. தற்போது, தமிழகத்தில் புதிதாக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன,

தமிழ்நாட்டில் முன்னதாக 528 பஞ்சாயத்துகள் இருந்த நிலையில் தற்போது இது குறைந்துள்ளது. நகர பஞ்சாயத்துகள் 664 என்ற எண்ணிக்கை இருந்த நிலையில் தற்போது கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மாநகராட்சிகளும் 28 நகராட்சிகளும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளன,
திருச்சி, நாகர்கோவில், ஓசூர், தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. எனவே தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கால அவகாசம் வழங்க மனுதாரரான தங்கள் தரப்புக்கு எந்த ஆட்சேபனை இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த திங்கட்கிழமை இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரமணா பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாத கால அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் கோரப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாத கால அவகாசம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்தது.
மேலும் கால அவகாசம் வழங்குவதில் ஆட்சேபனை உள்ளதா என்பது தொடர்பாக மனுதாரர் சங்கர் தரப்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல உள்ளாட்சி தேர்தலை நடத்த எவ்வளவு கால அவகாசம் தேவைப்படுகிறது என்பது தொடர்பாக பதிலளிக்கவும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications