Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்வு நேரம்.. நெருங்கும் பப்ளிக் எக்ஸாம்.. பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை நடத்துவதற்கு மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. 19ஆம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் முடிவடையும். இவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 12 முதல் 17ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

School Education department has appointed district level invigilators to conduct public exams

மார்ச் 4ஆம் தேதி பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் தொடங்கி 21ஆம் தேதி முடிவடைய உள்ளன. முன்னதாக செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 19 முதல் 24ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் வரை தேதி வரை நடைபெறுகிறது. 2024 பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 29ஆம் தேதி வரை 10ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வு நடைபெறுகிறது. மே 10-ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

இந்த நிலையில் 10, 11,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க, மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித் துறையில் மாநில அளவில் பணியாற்றும் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் உள்ளிட்டோர் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 38 மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+