பள்ளிகள் விடுமுறை: சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் நடந்த குளறுபடிக்கு என்ன காரணம்?
சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் என்பது மாவட்ட ஆட்சியர்களிடம் உள்ளது. ஒரு மாவட்டத்தின் நிர்வாக தலைவர் என்பதால் அந்த மாவட்டத்தில் மழை, புயல் மற்றும் பேரிடர் காலங்களில், சூழ்நிலை கருதி முடிவெடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு கலெக்டர் தான் விடுமுறை அறிவிப்பார். நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தும் ஏன் விடுமுறை அறிவிக்கப்படவில்லை.. இந்த குளறுபடிக்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதனால் மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், தமிழக அரசை கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மாணவர்கள் அவதி
ஏனெனில் நேற்று கனமழையின் காரணமாகச் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முக்கியச் சாலைகளிலும், சுரங்கப் பாதைகளிலும் நீர் தேங்கியது. இதனால் காலையில் பள்ளிக்குச் செல்லும் போதும், வேலைக்குச் செல்லும் போதும் பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்பட்டனர். அதேபோல் மாணவர்கள் அதிகாலை மழையில் நனைந்தபடி பள்ளிக்குச் செல்ல வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது. பல இடங்களில் பள்ளி வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து நனைந்தபடி தான் சென்றார்கள்.
ஆரஞ்சு அலர்ட்
வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்த பிறகும், மற்றும் களத்தில் மழை தீவிரமாகப் பெய்தும் விடுமுறை அறிவிக்காதது, நிர்வாகம் மக்களின் பாதுகாப்பைவிட வேறு காரணங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகப் பொதுமக்கள் கருதினார்கள். இதனாலேயே நேற்று கடுமையான விமர்சனங்களை அரசு எதிர்கொண்டது. அதேபோல் விடுமுறை அறிவிப்பு பொதுவாக முந்தைய நாள் மாலையிலோ அல்லது அன்றைய நாள் அதிகாலை 6 மணிக்குள் அறிவிக்கப்பட வேண்டும். இன்று காலை நிலைமை மோசமான பிறகும்கூட, எந்த அவசர அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
நிர்வாக அணுகுமுறை
"ஏன் அவசர கால முடிவை மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக எடுக்கவில்லை? முதல்வர் அல்லது தலைமைச் செயலாளரின் ஒப்புதலுக்காக ஏன் தாமதிக்க வேண்டும்?" என்ற கேள்விகளை மக்கள் சமூக ஊடகங்களில் எழுப்பினார்கள். எதிர்க்கட்சிகளுமே மாணவர்களின் பாதுகாப்பைப் புறக்கணித்துவிட்டதாக நேரடியாக அரசை விமர்சித்தன. இது அரசுக்கு தர்ம சங்கடமான நிலையை நேற்று ஏற்படுத்திவிட்டது.
மாவட்ட ஆட்சியர்கள் முடிவு
பொதுவாக மாவட்ட ஆட்சியர்கள் மழை, புயல் மற்றும் பேரிடர் காலங்களில், சூழ்நிலை கருதி முடிவெடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு கலெக்டர் தான் விடுமுறை அறிவிப்பார். அப்படி விடுமுறை எடுத்த விவரத்தை மட்டும் தலைமை செயலாளருக்கு (அதாவது முதல்வருக்கு) தகவலாக தெரிவித்தால் போதும். ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பது என்பது இப்போது தலைமை செயலகத்தில் முன்கூட்டியே தெரிவித்து, ஒப்புதல் பெற்று, அதன்பிறகு விடுமுறை அறிவிக்கப்படுகிறதா என்ற கேள்விகள் எழுகிறது. ஏனெனில் இவை தலைநகரமான சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் ஆகும்.
முதல்வரின் ஒப்புதல்
எனவே தலைநகரை சுற்றியுள்ள பகுதியில் கனமழையின் போது விடுமுறை அறிவிப்பது என்பது ஒரு பெரிய அரசியல் முடிவாகப் பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் தலைமையிலான அரசுதான் ஒட்டுமொத்தப் பேரிடர் மேலாண்மைக்கு மக்கள் முன் பொறுப்புக் கூற வேண்டும். எனவே மாநில அரசின் முக்கியமான முடிவுகள், குறிப்பாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட தலைநகரை ஒட்டிய மாவட்டங்களுக்கு வரும்போது, முடிவுகள் மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு, அரசு ஒரே குரலில் விடுமுறையை அறிவிக்க விரும்புவதாக தெரிகிறது. அதேபோல் விடுமுறை அறிவிக்கப்பட்டால், அதற்கு மாற்று ஏற்பாடாக மற்றொரு நாளில் வேலை நாளாக அறிவிக்க வேண்டியிருக்கும். இந்த மாற்று ஏற்பாடு குறித்த முடிவும் மாநில அளவில் எடுக்கப்பட வேண்டியதிருக்கிறது. எனவே தான் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடுமுறை என்பது முதல்வர் வரை சென்ற பின்னரே விடுமுறை அறிவிக்கப்படுகிறதாம். இப்படி நிர்வாக ரீதியாக முடிவுகள் எடுப்பதில் உள்ள பொறுப்புகள் பகிர்வே நேற்று நடந்த குளறுபடிக்கு என்ன காரணம் என்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications