தொடர் மழை.. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
Recommended Video
சென்னை: தொடர் மழை காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அதிக மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று விடிய விடிய பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வருகின்றன.
தமிழகத்தில் நவம்பர் 30, டிசம்பர் 1, டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. இதன் எதிரொலியாக நேற்று முன் தினம் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்டும், நேற்று ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

8 மாவட்டங்கள்
இந்த நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் படி தொடர் மழை பெய்து வந்ததால் 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை
கடலூர் கல்வி மாவட்டம், சிதம்பரம், வடலூர் பகுதியில் உள்ள கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் அரியலூர், ராமநாதபுரம், பெரம்பலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
நேற்றைய தினம் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வந்ததால் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications